tamilnadu

img

பாஜகவுடன் அதிமுகவின் கள்ளக் கூட்டணியால் முடிவடையாத பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

சென்னை,டிச.31-  ஒன்றிய பாஜகவுடன் அதிமுக வின் கள்ளக் கூட்டணி தொடர்வ தால் பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கில் இன்னும் விசா ரணை முடியாமலேயே இருக் கிறது. என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டி யுள்ளார்.  இதுகுறித்து தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி.   பொள்ளாச்சி வழக்கினை சிபிஐ- க்கு உடனடியாக மாற்றினேன் என  பெருமையாகக் கூறுகிறார். அதிமுக வின் முக்கிய புள்ளிகள் மறைமுக மாகவும், அதிமுகவின் பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அரு ளானந்தம் முக்கிய குற்றவாளியாக இருந்ததாலும், எடப்பாடி பழனிசாமி மீது துளியும் நம்பிக்கை இன்றி பொதுமக்கள், மாணவர்கள், எதிர்க் கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்  தால் சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப் பட்டது. ஆனாலும் மத்திய பாஜகவோடு அதிமுகவின் கள்ளக் கூட்டணி தொடர்வதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் விசாரணை முடியாமலேயே இருக்கிறது.  சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ, அதே போல இந்த வழக்கில் உறுதியான நட வடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.