பெரம்பலூர், ஜன. 31- நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை நேரத்தை மாற்றி குழப்பத்தை உருவாக்கு வதை கைவிடுமாறு விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பெரம்பலூரில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையில் வெள்ளியன்று (ஜனவரி 28) நடைபெற்றது. இதில் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டில் தற்போது பெரும்பகுதியான மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டுமென வலியுறுத்தப்படு கிறது. இதனால் திட்டத்தின் பயனாளிகள் - குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பயனாளிகளில் 80சதவீதம் பேர் பெண்கள் என்பதை கவனத்தில் கொண்டு வேலை நேரத்தை வழக்கம்போல் 9 மணிக்கு துவங்கும் வகையில் அறிவுறுத்தல்செய்யப்பட வேண்டும். சட்டக் கூலி ரூ.273ஐ முழுமையாக வழங்கி, தொடர்ந்து வேலையும் வழங்கிட வேண்டும். சாதி ரீதியான சம்பளம் எனும் சட்டத்தை வாபஸ் வாங்கிய பின்பும், தலித் ஆதிவாசிகளுக்கு சம்பளம் வரவில்லை. எனவே தலித், ஆதிவாசிகளுக்கு பல இடங்களில் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும். அக்டோபர் - நவம்பர் மாதம் கடும் மழையால் வேலை வருமானத்தை இழந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மழைக்கால பேரி டர் நிவாரணமாக குடும்பத்திற்கு தலா ரூ.10 ஆயி ரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். மாநில அரசு கோரியுள்ள பேரிடர் நிதி ரூ.6 ஆயிரம் கோடியை ஒன்றிய பாஜக அரசு காலம் தாழ்த்தாமல் உடன் வழங்கிட வேண்டும்.
ரூ.1000 கோடி தருக!
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வேலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு 5 மாதங்களைக் கடந்துள்ளது. மார்ச் இறுதியுடன் நிதியாண்டு முடியவுள்ள தருவாயில், நகர்ப்புற தேர்த லுக்குப் பின் உடனடியாக வேலைத்திட்டத்தை துவங்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை களுக்கு இலவச பட்டா வழங்கிட வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயி கள் நலவாரிய சட்டத்தை மேம்படுத்தி, அறி வித்துச் செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மோடி அரசின் துரோகத்திற்கு எதிராக...
ஒன்றிய பாஜக அரசு, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஓராண்டாக நடத்திய போராட்டத்தின் காரண மாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்ற போது, அறிவித்த வாக்குறுதிகளை நிறை வேற்றாமல் வஞ்சித்தும், துரோகமிழைத்தும் உள்ளது. இதைக் கண்டித்து டிசம்பர் 31 அன்று நாடு முழுவதும் “விவசாயிகள் துரோக தினம்” கடைபிடித்து நடைபெறும் போராட்டத்தில், விவசாயத் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மார்ச் 28, 29 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள, அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆத ரவு தெரிவித்து - விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை சீரழிக்காதே - 200 நாள் வேலை தினக்கூலி ரூ.600 வழங்கு” என்ற முழக்கத்துடன் பங்கேற்பது என்பன உள்ளிட்ட முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மாநிலக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர் மற்றும் நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் கடைவீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, “மதவெறி சக்திகளிடமிருந்து தேசத்தைப் பாதுகாப்போம் - மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தைப் பாதுகாப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி எடுக்கப்பட்டது.