பட்டுக்கோட்டையில் விவசாயத் தொழிலாளர் சங்க கிளை அமைப்பு
தஞ்சாவூர், ஜூன் 5 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம் ஏரிப்புறக்கரையில், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் வி.தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் கே.பெஞ்ச மின், விவசாயத் தொழிலாளர் சங்க அதம்பை பகுதி பொறுப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சங்கத்தின் அமைப்பு, செயல் திட்டம் குறித்து விளக்கிப் பேசினர். புதிய நிர்வாகிகள் கிளை அமைப்பு கூட்டத்தில் சுமார் 29 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இதில், தலைவராக ஸ்ரீ லட்சுமி, துணைத் தலைவராக எம்.மாரிக்கண்ணு, செயலா ளராக சி.முத்துலட்சுமி, துணைச் செயலாளராக பாலுசாமி, பொருளாளராக ஆர்.முருகேசன் ஆகியோர் பொறுப்பா ளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஏரிப்புறக்கரை அரசூதி நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு, குடிமனைப் பட்டா தொடர்பாக, ஜூன் 9 ஆம் தேதி கும்பகோணத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள வரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரையை சந்தித்து மனு கொடுப் பது. ஜூலை 1 ஆம் தேதி ஏரிப்புறக்கரையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியேற்று வது என முடிவு செய்யப்பட்டது.
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை திருச்சிராப்பள்ளி, ஜூன் 5 - திருச்சி மாவட்ட காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர்க்கான சிறப்பு பேரவை திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. டி.ஏ.ஆர்.ஏ.டி.டி.ஏ.சி மாநிலக் குழு உறுப்பினர் புஷ்ப நாதன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அந்தோணி சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெ.ஜெயபால் சிறப்புரையாற்றி னார். மாவட்டத் தலைவராக மாலதி வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளராக புஷ்பநாதன், மாவட்ட பொரு ளாளராக ரமணி, மாவட்டத் துணைத் தலைவர்களாக கௌரி, சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர்களாக கருப்பையா, பாஸ்கரன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகர ணங்களை விரைந்து வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், வங்கி கடன் பெற கடுமையான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சாலையோரம் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
பாபநாசம், ஜூன் 5 - கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலை தமிழ கத்தின் முக்கியமான நெடுஞ்சாலையாகும். பாபநாசம் அருகில் உத்தாணியில் தொடங்கும் இச்சாலை, சுந்தரப் பெருமாள் கோயில் பைபாஸ், கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் முக்கியமான பைபாஸ் ஆகும். சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் உடைய இந்த பைபாஸ் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பைபாஸில் குடமுருட்டி, திருமலைராஜன் ஆற்றின் மீது பாலம் உள்ளது. இந்த சாலையின் இரு புறமும் தேவையற்ற செடிகள், கொடிகள் மண்டியுள்ளன. இதில் விஷ ஜந்துக்கள் அண்டியிருந்தால்கூட தெரியாது. இந்தச் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் படுகின்றன. வெளியிலிருந்து குப்பை, இறைச்சி கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்வதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். மழை நாட்களில் குப்பையால் தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. இந்த பைபாஸ் ஓரங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், தேவை யற்ற செடி, கொடிகளை அகற்றி பூச்செடிகள், மூலிகைச் செடிகளை நட்டு பராமரிக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.