நெருஞ்சலக்குடியில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 16 - திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் நெருஞ்சலக்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில், நெருஞ்சலக்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியுடன் இணைக் கும் முன்மொழிவு அரசுக்கு அனுப்பப் பட்டு இருப்பதால் வேலை நிறுத்தப் பட்டுள்ளதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி, ஒன்றிய மேற்பார்வையாளர் மணிகண்டன், ஊராட்சி பொறுப்பு செயலாளர் முருகு பாண்டியன் ஆகியோர் தரப்பில் தெரி விக்கப்பட்டது. மாநகராட்சியுடன் இணைக்க அர சாணை எதுவும் இல்லாத போது, வேலை தராமல் நிறுத்தியது சட்ட விரோ தம். எனவே தற்போது வேலை கோரி மனு கொடுக்கும் அனைவருக்கும் அடுத்த 15 நாட்களில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 324 தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். 15 நாட்களில் வேலை வழங்கவில்லை என்றால், வேலை தராத நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, விதொச மாந்துறை தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தை யில், விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், தவிச மாவட்ட துணைச் செயலாளர் எம்.பாலு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மார்ட் டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.