துருக்கி கல்வி நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் ரத்து
மும்பை ஐஐடி அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் போது, பாகிஸ்தா னுக்கு ஆதரவாக துருக்கி நாடு குரல் கொடுத்தது. மேலும் பாகிஸ்தா னுக்கு அதிநவீன டிரோன்களை வழங்கி யதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன் றிய அரசு பல்வேறு பொருளாதார தடை தொடர்பான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், துருக்கி கல்வி நிறு வனங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக மும்பை ஐஐடி அறிவித்துள் ளது. இதுதொடர்பாக மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப பல்கலைக் கழ கம் (ஐஐடி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துருக்கியில் உள்ள பல்வேறு பல்க லைக்கழகங்கள் உடனான கல்வி சார்ந்த ஒத்துழைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்யப்படுகிறது. அதே போல துருக்கியில் உள்ள கல்வி நிறுவனங்க ளில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரி மாற்ற நிகழ்ச்சிகளை ஐஐடி மும்பை கொண்டுள்ளது. தற்போது இந்தத் திட்ட மும் நிறுத்திவைக்கப்படுவதாகவும், இதில் எந்தவித முன்னேற்றமும் இனி ஏற்படாது” என அதில் கூறப்பட்டுள்ளது. ஐஐடி மும்பையைப் போன்றே, ரூர்கி (உத்தரகண்ட்) ஐஐடியும் கல்வி நிறுவ னங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு கோழிக்கோட்டில்