சென்னை, டிச.29 - ஆவின் நிறுவனம் பெடரல் வங்கி யுடன் இணைந்து பால் விவசாயி களுக்காக புதிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன் மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் விவசாயம் சார்ந்த உற்பத்தி பங்களிப்பை பெருக்கும் விதமாக பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு கடன் வழங்கும் திட்டத்தை பால் வளத்துறை மிக சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ரூ. 210 கோடிக்கு கடன் வழங்கப்பட் டுள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் பெடரல் வங்கியுடன் இணைந்து ஒரு புதிய கடன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. அதனடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கடன் விண்ணப்பம் பெற்ற உடன் கால தாமதமின்றி அந்தந்த பால் உற்பத் தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கப்படும். கடனுக்கான வட்டி 9.5 விழுக்காடா கும். கடன் 24 தவணையில் திருப்பி கட்ட வேண்டும். ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும் எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கப்படும். முறையாக கடனை திரும்ப செலுத்த உதவும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் தொகையில் 1 விழுக்காடு ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று நிலைத்த தன்மையுடைய சங்கங்களாக மாற்ற உதவுவதோடு வெண்மைப் புரட்சிக்கு வித்திடும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை 1,69,673 கடன் விண்ணப்பங்கள் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இதில் தகுதி யுடைய அனைவருக்கும் உடனடியாக கடன் வழங்கப்படும். அதன் துவக்கமாக 10 பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் தலைமையகத்தில் வைத்து ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் ஐ. ஏ. எஸ்.பெடரல் பேங்க் அலுவலர்கள் இக்பால் மனோஜ், கவிதா ஆகியோர் முன்னிலையில் கடன் வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.