சென்னை, அக்.11- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு சட்டத்தில் உள்ள விதி களுக்கு புறம்பாக செயல்பட்டும், சரி வர வேலை நிதி ஒதுக்கீடு செய்யாமலும் சிதைத்து வருகிறது. தற்போது கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்த திட்டத்தின் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காமல் பட்டினியில் தள்ளி உள்ளது.ஒன்றிய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத செயலைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் புதனன்று( அக்டோபர்11) ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டனப்போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் கார்ப்ப ரேட் ஆதரவு கொள்கைகள், கிராமங் களில் உள்ள 20 கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. உணவு மானியம் குறைப்பு, அத்தி யாவசியப் பொருட்களின் மிக கடுமை யான விலையேற்றம், வேலை யின்மையின் உச்சத்தால் வருமானம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கை நெருக்கடியில் சிக்கி உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கிடைத்து வரும் ஊரக வேலை திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அரைகுறையாக செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 39 ஆயிரம் கோடி ரூபாயை குறைத்து ஒதுக்கியது. அப்பொழுதே நாடு முழு வதும் இருக்கக்கூடிய பொருளாதார அறிஞர்கள் இது குறித்து கவலை தெரி வித்தனர்.ஆனால் ஒன்றிய அரசு அது குறித்தெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் கிராமப்புற ஏழைகளை வஞ்சித்தது.
தற்பொழுது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை செய்துள்ள பயனாளிகளுக்கு நான்கு வாரம் ஐந்து வாரம் என சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. பருவ மழை பொய்த்துப் போய் வேலையையும் வருமானத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும், விவ சாயக் கூலித் தொழிலாளர் உள்ளிட்ட ஏழைகளுக்கு வேலை செய்ததற்கான கூலியை வழங்காமல் மாதக்கணக்கில் இழுத்தடித்துப் பட்டினி போடுவதை கைவிட வேண்டும். உடனடியாக நிலுவை பாக்கியை விடுவிக்க வேண்டும். திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் முழுமை யாக வேலை வழங்கிட வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக வும், தினக்கூலியை ரூ. 600 ஆகவும் உயர்த்திட வேண்டும். பல்வேறு பொரு ளாதார ஆய்வு குழுக்கள் பரிந்துரைத்துள்ளவாறு திட்டத்திற்கு குறைந்தபட்சம் ரூ.2. 60 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு முழு வதும் 100க்கும் மேற்பட்ட மையங் களில் போராட்டம் நடைபெற்றது.20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் நடவடிக்கை யை கண்டித்து ஆவேச முழக்க மிட்டனர். அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி யிலும், மாநிலச் செயலாளர் வி.மாரி யப்பன் (திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை) மற்றும் மாநில நிர்வாகிகள் மாநிலக் குழு உறுப்பின ர்கள் பல்வேறு மாவட்டங்களில் பங்கேற்றனர்.