tamilnadu

ஒன்றிய அரசுக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம்!

ஒன்றிய அரசுக்கு எதிராக  முழு அடைப்புப் போராட்டம்!

ஒன்றிய அரசின் மோசடியான கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகமே ஓர ணியில் திரண்டு நிற்கிறது என்பதை உணர்த்தும் வகையில், முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார். மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் வகையில் கொண்டுவரப் பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான், தமிழகத்திற்கு உரிய நிதி யைத் தருவோம் என்று மிரட்டும் ஒன்றிய பாஜக அரசை எச்சரிக்கும் வகையில், திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் செவ்வாயன்று ( பிப்.18) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், பங்கேற்று பெ. சண்முகம் பேசியதன் சுருக்கம் வருமாறு:

ஒன்றிய அரசின் தான்தோன்றித்தனம்

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை பல்வேறு வகைகளிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு; ஒரே மொழி’ என்பதன் தொடர்ச்சியாக ‘ஒரே நாடு; ஒரே  கல்வி’ என்கிற பெயரில் தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. மாநிலங்களுடைய ஒன்றியம் தான் இந்தியா என்பதை மறந்துவிட்டு பாஜக-வினர், தனி தேசத்தை ஆட்சி செய்வதைப் போல நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் தான்தோன்றித் தனமாகவும் தன்னிச்சை யாகவும் செயல்படுவதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்காது.

தன்னை மாற்றிக்  கொள்ள வேண்டும்

இந்தியாவில் ஒப்பீட்டு அளவில் கல்வியில் முதன்மையான இடத்தில் தமிழகம் இருக்கிறது என்பதை ஒன்றிய அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. அத்தகைய தமிழ்நாட்டில் இன்னொரு மொழியை கட்டாயப்படுத்துவது  வன்மை யான கண்டனத்துக்கு உரியது. இதை ஒன்றிய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இத்தனை மொழி கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சட்டத்திலும் அப்படி சொல்லப்படவில்லை. அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தமிழ்நாடு நடந்து கொள்கிறது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் கூறுகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் அரசியல் சாசனத்தினுடைய எந்த ஒரு அம்சத்தையும் மதிக்காத கூட்டம் தான் இதைச் சொல்கிறது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத போதும் ஆர்எஸ்எஸ் திட்டங்களை அடா வடித்தனமாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒருபகுதியாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தர மாட்டேன் என்று சொல்வதற்கு ஒன்றிய அமைச்சருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது.  

முழு அடைப்புப் போராட்டம்

தமிழ்நாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட  நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அதேபோல இயற்கைப் பேரழிவுக்கும் நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தமிழகமே திரண்டு நிற்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஒரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக தலைமை திட்டமிட வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் பேசினார்.