கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்
சென்னை: அதிக காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை. இருந்தாலும், பாதுகாப்பிற்காக அணிவது நல்லது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவல் எதிரொலியாக கர்ப்பிணி கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக பொது சுகா தாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பக்ரீத் பண்டிகை: முதலமைச்சர் வாழ்த்து
சென்னை: பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டா டப்படவுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரர்களே. இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, நங்க நல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார உரிமைகளுக்காக தொடர்ந்து உழைத்து வரும் சகோதர உணர்வோடு, எனது பக்ரீத் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதிக்கு சகாயம் கடிதம்
மதுரை: கிரானைட் குவாரி வழக்கில் வெள்ளியன்று ஆஜராக இருந்த நிலையில், உயர்நீதிமன்ற தலைமை நீதி பதிக்கு சகாயம் கடிதம் அனுப்பியுள்ளார். பாதுகாப்பு பற்றி சகாயம் ஏற்கனவே பேசி இருந்த நிலையில், மதுரை நீதி மன்றம் காணொலியில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. வெள்ளியன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், தனக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி சகா யம் கடிதம் அனுப்பியுள்ளார்.
‘பல்’வீர் சிங் ஆஜர்
நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2023 இல் அம்பாசமுத்திரத் தில் பணியாற்றிய போது விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜரானார்.
போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்
சென்னை: சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப் படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி பெற வேண்டும். வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காண லின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம். தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக் கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே பேச வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஒருவர் பலி
விழுப்புரம்: கொரோனா தொற்றால் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரப்பேரி கிராமத் தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் உயிரிழந் தார். 3
நாள்களுக்கு கனமழை
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் ஜூன் 10, 11 மற்றும் 12 ஆம் தேதி களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
விஷமப் பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் மூவா யிரம் கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டு களில் குடமுழுக்கு செய்து சாதனை படைத்துள்ளது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. அதனை செயல்படுத்திய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் மனதார பாராட்டுகிறேன். மேலும், மதநல்லிணக் கத்தை போற்றுகிற வகையில் மதச் சார்பற்ற அரசாக திமுக அரசு செயல் படுவதை பொறுத்துக் கொள்ள முடியா மல், விஷமப் பிரச்சாரம் செய்து வருகிற ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்களும் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக் கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி யைத் தருகிறது என்றும் செல்வப் பெருந்தகை வெளியிட்டிருக்கும் அறிக் கையில் தெரிவித்திருக்கிறார்
திமன்ற கிளை கருத்து
மதுரை: காவல்துறையினர் நடுநிலையான அமைப்பாக செயல் பட வேண்டும்; இது ஒரு ஜனநாயக நாடு என மதுரை முருக பக்தர் கள் மாநாடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை யில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22 வரை வழிபாடு செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் மனுத் தாக்கல் செய்யப்பட் டது. வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட காவல் உதவி கண்காணிப் பாளர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது..
மருத்துவர் பணியிட மாற்றம்!
திருவள்ளூர்: திரு வள்ளூர் அரசு மருத்துவ மனையில், திருத்தணி கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப் பிய சம்பவம் அரங்கேறி யது. இவ்விவகாரத்தில் விசாரணை அறிக்கையின் படி, அலட்சியமாக செயல் பட்ட மருத்துவர் கிருஷ் ணாவை திருவண்ணா மலைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்து வக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
விமானிகள் புகார்
சென்னை: சென்னை யில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டதாக விமானிகள் புகார் தெரி வித்துள்ளனர். துபாயி லிருந்து 304 பேருடன் சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் தரையிறங்க முயன்றபோது, லேசர் ஒளி அடிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் 2 ஆவது முறை யாக விமானத்தின் மீது லேசர் ஒளியை மர்ம நபர்கள் பாய்ச்சி அடித்துள்ளனர். பரங்கிமலை பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டதாக விசார ணையில் தெரிவிக்கப்பட்டது.
பாஜக முன்னாள் நிர்வாகி கைது
தென்காசி: சுரண்டையில் துப் பாக்கி முனையில் சிறுமியை பலாத்கா ரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய் யப்பட்டார். தலை மறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீல கண்டனை ஆலங் குளம் காவல்துறை யினர் மும்பையில் கைது செய்தனர்
‘விரைவில் நல்ல செய்தி வருமாம்!’
சென்னை: பாமக நிறு வனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே யான மோதல் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும் என்று ஜி.கே.மணி தெரிவித்திருக் கிறார். செய்தியாளர்களி டம் பேசிய அவர், “இரு வரும் 45 நிமிடங்கள் பேசி யிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாகதான் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்ப டும். விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார்.
‘இபிஎஸ் வெட்கப்பட வேண்டும்’
சென்னை: பாஜக வுடன் கள்ளக் கூட்டணியை, நல்லக் கூட்டணியாக்க தில்லிக்கு போன எடப்பாடி பழனிசாமி, தொகுதி மறு சீரமைப்பு பற்றிப் பேசி னேன் என இன்றைக்கு புதுக்கதை எழுதியுள்ளார் என்றும், கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் பேச்சுகளை எல்லாம் தன்னுடைய மவுத் பீஸில் பேசுவதற்கு இபிஎஸ் வெட்கப்பட வேண்டும் என் றும் அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக நிர்வாகி நீக்கம்
சென்னை: அரசு வேலை வாங்கித் தருவ தாக பண மோசடியில் ஈடு பட்ட வழக்கில் கைதான அதிமுக ஐடி நிர்வாகி பிர சாத்தை, அக்கட்சியி லிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசு கோரிக்கை
சென்னை: பெண் ணையாறு நதிநீர் பங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பெண்ணையாறு நதிநீர் பங்கீடு பிரச்சனையில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் இடையே உடன்பாடு எட்டப்பட வில்லை. உடன்பாடு எட்டப்படாததால் தீர்ப்பா யம் அமைக்க ஒன்றிய அமைச்சர் சி.ஆர்.பாட்டீ லுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.