tamilnadu

img

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி பொறுப்பேற்பு

சென்னை, மார்ச் 27-  சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப் பேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த பி.வடமலையை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த 23 ஆம் தேதி குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திங்களன்று (மார்ச் 27) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் நீதிபதி யாக பொறுப்பேற்ற நீதிபதி வட மலைக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி  டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து  வைத்தார். கூடுதல் நீதிபதி நியமனத் தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதி இடங்களின் எண்ணிக்கை 75 ஆகும். நீதிபதி பி.வடமலையை வரவேற்று  தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், மெட்ராஸ் பார்  அசோசியேசன் தலைவர் கமலநாதன்,  லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் மற்றும் பெண் வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் லுயிசால் ரமேஷ்  ஆகியோர் வரவேற்று பேசினர். இதனையடுத்து ஏற்புரை வழங்கிய நீதிபதி பி.வடமலை, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.