tamilnadu

img

அதானி உலகின் 3ஆவது பணக்காரரானது தான் மோடி ஆட்சியின் சாதனை

கே.வரதராசன் நகர்   (திருச்சூர்), டிச.14- விவசாயிகளை துயரத்தில் தள்ளி கவுதம் அதானியை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியில் நடந்த முக்கிய சாதனை என்று அகில இந்திய விவசாயிகள் சங்க  தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே  கூறினார்.  மோடி அரசு விவசாயிகளை வெகுஜன தற்கொலையிலும், மிகுந்த அவலத்திலும் தள்ளி அதானி, அம்பானி போன்ற ஏக போகவாதிகளை வளர்த்து வரு கிறது என்றும் குற்றம் சாட்டினார். திருச்சூரில் செவ்வாயன்று (டிச.13) அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் 35 ஆவது அகில  இந்திய மாநாட்டிற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசிய தாவது:  பில்கிஸ்பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோடி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் தேடப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.  

ஆதிவாசிகள், பெண்கள், தலித்துகள் என அனைவரும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள் ளனர். அதே நேரத்தில், கேரளாவில் இடதுஜனநாயக முன்னணி ஆட்சியில் சிறப்பான நலத்திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் நடந்து வருகின்றன. விவ சாயிகளுக்கு சாதகமான நிலைப் பாட்டை எடுக்கும் அரசு கேரளா வில் உள்ளது. மற்ற அனைத்து மாநிலங்களி லும் நெல்லுக்கு ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2040 மட்டுமே என்ற நிலையில், கேரள அரசு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2870 வழங்குகிறது. மற்ற மாநிலங்களில் தொழிலாளர்களின் கூலி ரூ.250-300 மட்டுமே, கேரளாவில் தினக்கூலி ரூ.900-1200. இந்தியாவில் பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.  அதே வேளையில், பாஜக--ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசு இரக்கமின்றி விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தாவ்லே கூறினார்.