tamilnadu

img

மகாராஷ்டிரா அரசு மீது நம்பிக்கையிழந்த நடிகர் சல்மான் கான்

மும்பை, அக். 20- மகாராஷ்டிரா முன்னாள் அமைச்ச ரும், தேசியவாத காங்கிரஸ் தலைவரு மான (அஜித்) பாபா சித்திக், பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அக். 12 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். பாபா சித்திக் போல அவரது மகன் சீஷான் சித்திக், நண்பரும் நடிகருமான சல்மான் கான் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல். ஒய் பிளஸ் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பாபா சித்திக் கொல்லப்பட்டுள்ளதால், மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நடிகர் சல்மான் கான் சொந்தமாக பாதுகாப்புப்படை அமைப்பை உருவாக்கியுள்ளார். ரூ.2 கோடியில் கார் இந்திய வாகன சந்தையில் கிடைக்காத ரூ.2 கோடி மதிப்புள்ள குண்டு துளைக்காத “புல்லட் புரூப்” காரை நடிகர் சல்மான் கான் துபாயில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல 60 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவை சொந்தமாக நியமித்துள்ளார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.