சென்னை,ஜன.7- தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு தமது பதிலுரையில் முதலமைச்சர் கூறியது வருமாறு:- கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஸ்மார்ட்டாக பல விஷயங்களை செய்துள்ளனர். அதுவும் சென்னை வெள்ளப் பெருக்குக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் ஆட்சியில் கொடநாடு கொலை, கொள்ளையில் தொடங்கி, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வரை நடந்ததை பட்டியலிடலாம். குட்கா விற்பனையில் முத்திரை பதிப்பவர்களாக நீங்கள் திகழ்ந்தீர்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பு தனது கையில் கறை உள்ளதா? என்று பார்த்து பேசவேண்டும். அதிமுக வினரை தேவை இல்லாமல் விசாரணைக்கு அழைத்து செல்வதாக அவர் கூறியிருக்கிறார். தப்பி ஓடிய ஒரு குற்றவாளி கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்பட்டு விட்டார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பண்டிகையை யொட்டி 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வரும் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள லாம் என அமைச்சர் சக்கர பாணி அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்குவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
புதிதாக போக்சோ நீதிமன்றங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 ஆயிரத்து 363 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மட்டும் 338 வழக்குகளில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்சோ வழக்கு களை விசாரிப்பதற்காக திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
சிறைவாசிகள் முன் விடுதலை!
10 மற்றும் 20 ஆண்டுக ளுக்கு மேல் சிறையில் இருந்து வரும் சிறைவாசிகள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயுற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோரைச் சட்ட வழி களைப் பின்பற்றி, பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நூல் விலை குறைப்போம்!
ஜவுளித்துறையை மேம்படுத் துவதற்கு நூல் விலையை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து ஏற்கெனவே, 27.11.2021 அன்று ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த அரசு நெசவாளர்களின் நலனை பாதுகாக்கும். நூல் விலை உயர்வை குறைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எஸ்சி, எஸ்டி மக்களுக்கு தளர்வு
“நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுடைய பங்கு என்பதை பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு என விதிகள் தளர்த்தப்படும்”. கம்பீரம் இந்த ஆளுநர் உரையை படித்து ஆராயும் நடுநிலை யாளர்கள், கொள்கை மற்றும் செயல்திட்ட அறிக்கையாக அமைந்துள்து என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இந்த பாராட்டு எனக்கு கிடைத்தது அல்ல. ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் கிடைத்த பாராட்டு. அதிகாரிகளுக்கு கிடைத்த பாராட்டு, திமுக உள்ளிட்ட தோழமை கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு கிடைத்த பாராட்டு என்பதால் உங்கள் முன் முதலமைச்சராக கம்பீரமாக நிற்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.