tamilnadu

img

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை

சென்னை, ஜூலை 20- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை  உடனடியாக வழங்க கர்நாடக அரசை வலியுறுத்த  வேண்டும் என ஒன்றிய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திடம் தமிழ்நாடு மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். தில்லியில் ஒன்றிய அரசின் நீர்பாசன துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச் சர் துரைமுருகன் வியாழ னன்று (ஜூலை 20) சந்தித் தார். அப்போது, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு அளிக்க, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவை யான அறிவுரைகள் வழங்கக்  கோரி ஜூலை 17 அன்று முதலமைச்சர் எழுதிய கடிதத்தை வழங்கினார். இந்த சந்திப்புக்கு  பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,“முதல மைச்சரின் கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினேன். அவர்  உடனடியாக நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித் தார். நதிநீர் பங்கீடு விவகா ரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக உள்ளது”என்றார். உச்ச நீதிமன்ற உத்தர வின்படி, மாதம் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு  வழங்க வேண்டும். ஜூன் மாதம் தமிழகத்திற்கு தர  வேண்டிய தண்ணீர், தற்போது வரை வழங்கப் படவில்லை. மேகதாது அணையை ஒருபோதும் கட்ட அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.