சென்னை,அக்.16- தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு சட்டக் கல்லு ரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நிய மனங்களை மேற்கொள்ளக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனு மதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரி யர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரி யர் பணியிடங்களில் 70 பணியிடங் கள் காலியாக உள்ளன” என்று தெரி விக்கப்பட்டது. “அரசு சட்டக் கல்லூரிகளில் பேரா சிரியர்களுக்கான பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பது துரதிருஷ்டவசமானது” என்று நீதிபதி பட்டுதேவானந்த் அதிருப்தி தெரிவித்தார். மேலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடுவது நல்லது என காட்டமாக தெரிவித்து, அரசின் சட்டத் துறைச் செய லர் நேரில் ஆஜராகுமாறு உத்தர விட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றபோது, தமிழக அரசின் சட்டத் துறைச் செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆஜராகி, “அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று விளக்கம் அளித்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசு சட்டக் கல்லூரிகளில் காலி யாக உள்ள பேராசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சில விளக்கங்களை கோரியுள்ளது. அவற்றுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும். அதன் பிறகு தேர்வு அறிவிப்பை ஆசிரி யர் தேர்வு வாரியம் முறைப்படி வெளியிடும்” என்று தெரிவித்தார். அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.