சென்னை, பிப்.28- இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது; ‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடிக் கப்பலில் பிப்ரவரி 24 அன்று அதிகாலையில் பாக்., வளை குடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது, இலங்கைக் கடற்படையி னரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டி தளத் திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள னர். இதேபோல், புதுச்சேரி, காரைக் கால் பகுதியைச் சேர்ந்த 13 மீன வர்கள் மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிப்ர வரி 26 அன்று இராமநாதபுரம் மாவட்டத் திலிருந்து இயந்திரப் படகில் மீன்பி டிக்கச் சென்ற 8 மீனவர்கள் பிப்ரவரி 27 அதிகாலையில் இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கிராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நமது மீனவர்கள் இலங்கைக் கடற்ப டையினரால் குறுகிய கால கட்டங்க ளில் தொடர்ந்து இதுபோன்று எதிர் கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும், மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. எனவே, பாக்., வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகை யிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். மேலும், இவ்விவகாரத்தில் பிரத மர் மோடி நேரடியாகத் தலையிட்டு, மீன வர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சனையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண் டும்.’’ இவ்வாறு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.