tamilnadu

img

கருத்து சுதந்திரத்தின் மீதான படையெடுப்பு: வாலிபர் சங்கம்

திருவனந்தபுரம், மே 2- கேரளாவுக்கு எதிராக ஒன்றிய உள்  துறை அமைச்சர் அமித் ஷா கூறிய சில  கருத்துக்களை விமர்சித்து நாளிதழில் கட்டுரை எழுதிய ஜான் பிரிட்டாஸ் எம்பிக்கு  எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கூறியுள்ளது. கர்நாடக தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில்  பேசிய அமித் ஷா, ‘கேரளா உங்களுக்கு அருகில் உள்ளது. நான் அதிகம் சொல்ல வில்லை’ என கேரளாவை விமர்சித்து பேசி யுள்ளார். அவை அனைத்து ஊடகங்களி லும் வெளிவந்தன. ஜான் பிரிட்டாஸ் தனது  கட்டுரையில் இந்த குறிப்பைச் சேர்த்ததற்கு  மாநிலங்களவை தலைவரால் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேரளா வை அவமதிக்கும், முறைகேடு செய்யும்  பிரதமரும், அமைச்சர்களும், அவற்றுக்கு  எதிரான விமர்சனங்களுக்கு அஞ்சுகின்றனர். மதச்சார்பின்மை, ஜனநாயகம், வளர்ச்சி என உலக நாடுகளின் முன்பு நாட்  டிற்கு பெருமை சேர்த்த கேரளாவை அவ மதிக்கும் வகையில் கேரள பிரதிநிதியின் விமர்சனத்தை ஒன்றிய அரசு ஜனநாயக விரோதமாக எதிர்கொள்கிறது. ஒன்றிய அரசு, மாற்றுக் கருத்துகளுக்கு அஞ்சி, அர சமைப்பின் 19 ஆவது பிரிவின் கீழ் குடி மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை யைப் பயன்படுத்தியதற்காக மக்கள் பிரதி நிதிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருத்து வேறுபாடுகள் ஜனநாய கத்தின் ஒரு பகுதி. எதிர்ப்புக் குரல்களை யும் மாற்றுக் கருத்துகளையும் ஒடுக்குவது  ஜனநாயகத்துக்கு இழுக்கு என ஒரு  அறிக்கையில், வாலிபர் சங்க கேரள மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாய கத்திற்கு எதிராகவும் நடத்தப்படும் இத்த கைய தாக்குதல்களுக்கு கடும் கண்ட னத்தை வாலிபர் சங்கம் தெரிவித்துள்ளது.