tamilnadu

img

காவிரி ‘பந்த்’: மயிலாடுதுறையில் ஆவேசம்

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும், உரிய நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசையும் கண்டித்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் புதனன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் உட்பட பலர் உரையாற்றினர்.