tamilnadu

ஆய்வக உதவியாளர்களுக்கு கல்வித்துறை உத்தரவு

சென்னை,பிப்.4- அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக  பராமரிப்பு தவிர இதர பணிகள் வழங்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச்செயலர்  ஜெ. குமரகுருபரன், இயக்குநர்க. அறிவொளிக்கு அனுப் பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு உயர்நிலை, மேல்நிலைப்  பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல்  திறனை மேம்படுத்தும் விதமாக அடல்  டிங்கரிங் ஆய்வகம் (ஒன்றிய அரசின் நிதியுதவி), உயர் தொழில்நுட்ப கணினி  ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, பாடம்  சார்ந்த இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங் கள், மொழி ஆய்வகங்கள், தொழிற் கல்வி மற்றும் கணித ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வகங்கள் பள்ளி மாண வர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் படைக் கும் திறனை மேம்படுத்துவதற்கு உந்துதலாக அமையும். இத்தகைய பள்ளி ஆய்வகம் மற்றும் அதன் உப கரணங்களை முறையாக பராமரித்து வருவதில் ஆய்வக உதவியாளர்கள் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. எனவே, ஆய்வக உதவியாளர் களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், பாடத்திட்ட அடிப்படை யில் ஆய்வக செயல்பாடுகள் தொடர்ச்சி யாக நடைபெறவும் அனைத்து பள்ளி களின் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனுடன் ஆய்வக பராமரிப்பு பணி களில் முழு கவனம் செலுத்தும் வகையில்ஆய்வக உதவியாளர் களுக்கு அவர்களுக்கு பணியை மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்கள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.