tamilnadu

img

ரயில்வேயில் தனியார்மயத்தை புகுத்துவதை கைவிடுக: டிஆர்இயு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.23 - தட்க்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் மத்திய செயற்குழு கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடந்தது.  கூட்டத்திற்கு டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா சிறப்புரையாற்றினார்.  ரயில்வேயில் தனியார் மயத்தை புகுத்துவதை கைவிட வேண்டும். போனஸ் உச்சவரம்பை ரத்து செய்து, உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும், குறிப்பாக இன்ஜினியரிங் பிரிவுகளில் 8 மணி நேர வேலையை உறுதிசெய்ய வேண்டும். ரயில்வேயில் நடைபெற உள்ள தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். டிஆர்இயு பொதுச்செயலாளர் ஹரிலால் நன்றி கூறினார்.