கும்பகோணம், ஏப்.14 - மோடி ஆட்சியால் ஜனநாயகத்தை பிடித்த கிரகணத்தை விடுவிக்கும் நாள் வந்துவிட்டது என்றார் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா கை சின்னத்தில் போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குச் சேக ரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தர ராசன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவை ஆதரித்து கைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சுதந்திர இந்தியா வரலாற்றில், மோடி யின் பத்தாண்டு கால ஆட்சி, இனி ‘இருண்ட காலம்’ என்று பதிவு செய்யப்படும். ஜனநாயகத்தை பீடித்த அந்த கிரகணம் இந்த தேர்தலோடு விடுபட்டு, வெளிச்சம் பிறக்கும். 400 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொன்ன பாஜகவினர், இப்போது அவ்வாறு சொல்வதை நிறுத்திக் கொண்டனர். காரணம் 200 தொகுதியே தேறாது என்ற புள்ளி விவரங்களுடன் வெளியான செய்தி உண்மை என்பது தெரிந்துவிட்டது. மோடியோ, கருவாட்டைச் சுற்றி பூனை வருவது போல, தமிழகத்தை சுற்றி வருகிறார். ஆனால் தமிழகத்தில் மோடிக்கு கருவாடும் கிடைக்காது; ஒன்றும் கிடைக்காது. தமிழ்நாடு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக, பாஜகவோடு கூட்டணி வைத் தால் மோடியின் சுமையையும் எதிர்ப்பையும் நாம் சுமக்க வேண்டும் என்பதால், தனி யாக இருப்பதாக நாடகமாடுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்த போது, மக்கள் விரோத சட்டமான குடியுரிமை சட்டம் (சிஏஏ), விவசாயிகள் விரோதச் சட்டம், தொ ழிலாளர்கள் விரோத சட்டம் என பல கருப்புச் சட்டங்களை நிறைவேற்ற கை தூக்கினர். இப்போது இவர்கள் புனிதர் வேடம் போடுகி றார்கள்; இவர்களது எந்த வேடமும் எடுபடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் மதவெறி சித்தாந் தத்தை அழிக்க, மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் சுதாவிற்கு கைச் சின்னத்தில் வாக்களித்து, நாடாளுமன்றத்தில் நமது குரலை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பரப்புரையின் போது திமுக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகரச் செயலாளர் தமிழழகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆர். மனோகரன், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயபால், நகரச் செயலாளர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் அ.செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.