பெரம்பலூர், ஆக. 20 - 2024-நடாளுமன்ற தேர்தலில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தி.மு.க. இருக்கும்; அப்போது நீட் ஒழிக்கப்படும் என்று பெரம்பலூர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆ.இராசா.எம்.பி., கூறினார். நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் சர்வாதிகார ஒன்றிய அரசையும் தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில், 20.8.2023 அன்று உண்ணாவிரத போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமையேற்று தி.மு.க.துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார். அப்போது, காட்டாட்சி, தர்பார் ஆட்சி நடத்தும் மோடி, அமித்ஷா கும்பலை வருகிற 2024-நடாளுமன்ற தேர்தலில் விரட்டியடிப்போம் என்றும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் இடத் தில் தி.மு.க.இருக்கும் அப்போது நீட் ஒழிக்கப்படும் என்றும் கூறி, பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். திமுக பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்- சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ. அப்துல்கரீம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்- நகர்மன்ற துணை தலைவர் து.ஹரிபாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, மருத்துவர் சி.கருணாகரன் திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், உள்ளிட்ட2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.