tamilnadu

img

ஈரோடு : காங். வெற்றி

ஈரோடு, மார்ச் 2-    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் சுமார் 66ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவி கேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப் பட்டார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில்  அதிமுகவின் வேட்பாளராக தென்ன ரசு அறிவிக்கப்பட்டார். தேமுதிக, நாம்தமிழர் கட்சி மற்றும் பலர் போட்டி யிட்டனர். பிப்ரவரி 27 அன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மார்ச் 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி, பதிவான வாக்குகளில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்தார். நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளும் தேமுதிக 1301 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தனர்.  அதிமுகவை தவிர எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஈவிகேஎஸ்.இளங்கோவனின் வெற்றியை திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும் மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.  அதிமுக படுதோல்வியால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் 39 ஆண்டு களுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோ வன் சட்டமன்ற உறுப்பினராகிறார். 75 வயதான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1984 ஆம் ஆண்டு சத்தியமங்க லம் சட்டமன்ற தொகுதியில் இருந்து  எம்.எல்.ஏ.வாக தேர்வுசெய்யப் பட்டார். 2004 முதல் 2009 வரை கோபிச்செட்டி ப்பாளையம் நாடாளுமன்ற தொகுதி யில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்ச ராக பதவி வகித்தவர் ஆவார். வெற்றி குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய வெற்றியை ஈரோடு மக்கள் தந்திருக்கிறார்கள். என்னை வெற்றி பெற வைத்த ஈரோடு  மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடு வேன். இந்த வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றி மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.