tamilnadu

img

ஒரு குட்டிக் கதை கேளுங்க..!

ஒரு ஊரில் பெரும் பணக்காரன் ஒருவன், அனைவருக்கும்  பணம்  தரப்போவதாகவும் ஊரில் உள்ள மைதானத் திற்கு வரும்படியும் தண்டோரா அடித்துச் சொன்னான். இதனைக் கேட்ட மக்கள் ஊரின் மைதானத்தில் குவிந்தனர். அப்போது அந்த பணக்காரன், மக்களை நோக்கி சொன்னான், “முதலில் வருபவருக்கு ஒரு ரூபாய் தருவேன்.இரண்டாவதாக வருபவருக்கு இரண்டு ரூபாய் தருவேன்.  பத்தாவதாக வருபவருக்கு 10 ரூபாய் தருவேன், லட்சமாவது ஆளாக வருபவருக்கு லட்சம் ரூபாய் தருவேன்” என்று கூறினான்.  இதனைக் கேட்ட மக்கள் உடனே வரிசையிலிருந்து கலைந்து சிதறி ஓடினர். ஆயிரமாவது ஆளாகவும் பத்தாயிரமாவது ஆளாகவும் லட்சமாவது ஆளாகவும் வரிசையில் நிற்க போட்டிப்போட்டனர். ஆனால் முதலாவது ஆளாக வர யாரும் முன்வரவில்லை. இதனைப் பார்த்த அந்த பணக்காரன் “இந்த ஊரில் யாருக்கும் பணத்தாசை இல்லை போலும். அதனால்தான் முதலாவது ஆளாக வரமாட்டேன் என்று பின்னால் செல்கிறீர்கள். எனவே நான் கொண்டு வந்த பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றான். இந்த கதைபோலத்தான் பிரதமர் மோடியின் ரூ.15 லட்சம் ரூபாய் அறிவிப்பு உள்ளது. மதுரையில் சு.வெங்கடேசனை ஆதரித்து சிஐடியு நடத்திய பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சொன்ன கதை