tamilnadu

img

தனி முத்திரை பதித்த தலைவர்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான கோடியேறி பாலகிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர், கேரள மாநிலச் செயலாளர் என கட்சியின் பல மட்டங்களில் செயல் பட்டு மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கோடியேறி பாலகிருஷ்ணன்.  சிறந்த ஆட்சியாளர் என்ற முறையிலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தனிமுத்திரை பதித்தவர். மாணவர் இயக்கத்தின் மூலம் பொதுவாழ்க்கைக்கு வந்த கோடியேறி பாலகிருஷ்ணன் கட்சி, வாலிபர் சங்கம், வர்க்க-வெகுஜன அமைப்புகளிலும் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தியவர். இடது சாரி ஜனநாயக முன்னணியை கட்டுக்கோப்பாக முன்னின்று வழிநடத்தி ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர். பல்வேறு நெருக்கடியான சவால்களை எதிர்கொண்டு கம்யூனிச இயக்கத்தைக் கட்டமைத்தவர். கட்சி பத்திரிகையான தேசாபிமானி யின் முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். காலத்திற்கேற்ற வாறு தேசாபிமானியை நவீனப்படுத்து வதிலும் பத்திரிகையின் வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்டுவருவதிலும் அதிகக் கவனம் செலுத்தினார்.  இயக்கத்தின் குரலாக ஒலிப்பதுடன் தேசாபிமானியை ஒரு பொது பத்திரிகை யாக வளர்த்தெடுப்பதிலும் சிறந்த பங்க ளிப்பை வழங்கினார். பத்திரிகையை நவீனப்படுத்தி அதிகப்படியான மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்த காலத்தில்தான் அவர் நோய்வாய்ப்பட்டார்.  நோயினால் ஏற்பட்ட சிரமங்களை யெல்லாம் ஒரு பொருட்படுத்தாமல் இயக்கத்திற்காக இறுதிவரை போராடிய தோழர் கோடியேறியை என்றென்றும் நினைவு கூர்வோம்!