சென்னை, ஜூலை 9- பாரம்பரியமிக்க நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் இன்ஜின் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய அமைச்சர், ரயில்வே துறை யில் பல்வேறு வளர்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வந்தாலும் பழைய நீராவி என்ஜின் என்பது பலரின் நினைவாக உள்ளது எனக் கூறி னார். நீராவி இன்ஜின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில், 2 முதல் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் ரயில்களில் இதனை இணைக்க முடிவு செய்திருப்பதாக வும் அவர் தெரிவித்தார்.