நடுங்கும் கைகளின் நடுக்கத்தை நிறுத்த உத வும் ஸ்மார்ட் ஸ்பூன் கருவியை இந்திய மாணவர் கண்டுபிடித்துள்ளார். ரோபோட்டிக்ஸ் துறையில் ஆர்வமுடைய இவர் உணரிகளைப் பயன்படுத்தி நடுக்கங்களை இல்லாமல் செய்யும் விலை மலிவான கருவியை உருவாக்கியுள்ளார். 2022 இல் பார்க்கின்சன் (Parkinson’s) நோயால் அவதிப்படும் தன் மாமா ஆர்ஜனை (Arjun) பார்த்தபோதே ஆரவ் அனி லுக்கு(Aarrav Anil) இந்த கண்டுபிடிப்பிற்கான உள்ளுணர்வு ஏற்பட்டது. பார்க்கின்சன் நோய் ஏற்படுத்திய தளர்ச்சியால் ஆர்ஜன் உணவு உண்ண பெரும் பாடுபட்டார். கையில் எடுத்து வாயில் போடப்படும் உணவு வாய்க்குள் செல்லாமல் ஆடையிலும் தரையிலும் சிந்தியது. ஆர்ஜன் தன் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தார். ஆனால் பலன் இல்லை. விரக்தியே மிஞ்சியது. சுயமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அந்த எழுபது வயது ஓய்வு பெற்ற சிவில் ஊழியர் தனக்கு உணவு ஊட்ட உதவி யாளரை அழைத்தார். உணவு உண்ணும்போது மாமாவின் நடுங்கும் கைகளில் இருந்த ஸ்பூன் நிலநடுக்க அதிர்வுகள் போல பலமாக ஆடும் காட்சியை பார்த்த பெங்க ளூரைச் சேர்ந்த பதினேழு வயது கல்லூரி மாண வர் ஆரவ் இதற்கு தீர்வு காண ரோபோட்டிக்ஸ் பக்கம் தன் முழு கவனத்தையும் திருப்பினார். மைக்ரோ கண்ட்ரோலர்கள், உணரிகள், மோட்டார் கள் மற்றும் ஒரு முப்பரிமாண அச்சுப்பொறி ஆகிய வற்றால் நிரம்பிய தன் அறையின் கதவுகளை தாளிட்டு மூடி ஸ்மார்ட் ஸ்பூனுக்கான தீவிர ஆய்வு களில் மூழ்கினார். விளைவாக முன்மாதிரி (prototype) ஸ்மார்ட் ஸ்பூன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருவி இப்போது பெங்களூர் ஆர் வி உடலியக்கவியல் கல்லூரியில் பரிசோதனையில் உள்ளது. ஆற்றல் சேமிப்பு மின்கலனின் மூலம் இயங்கும் உணரிகள் ஸ்பூனில் ஏற்படும் நடுக்கங்களை ஒருபக்கம் கண்டு பிடிக்கும்போது மற்றொருபக்கம் அது நடுக்கங் களை ரத்து செய்யும் செயல்பாட்டில் இறங்கு கிறது. இதனால் நடுக்கங்கள் நின்றுபோகின்றன. பயன்படுத்துபவரின் கையில் ஸ்பூன் ஆடாமல் நிலையாக நிற்கிறது. ”கல்லூரியில் இருந்து கிடைத்த கருத்து களின் அடிப்படையில் இதன் செயல்பாடு மேம் படுத்தப்பட்டது. இந்த கருவி நீரால் பாதிக்கப் படாது. ஸ்பூனின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள மின்னணு பாகங்கள் சேதமடையாது. சுலபமாக கழுவி பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. ஸ்பூனை இணைப்பில் இருந்து எளிதில் கழற்றலாம். மற்றொரு முட்கரண்டியால் எளிதில் தூய்மை செய்யலாம். அதிக உணவை எடுக்கும்வகையில் ஸ்பூனின் உட்பரப்பு ஆழமாக இருக்கும்படி உருவாக்கப பட்டுள்ளது. இது போன்ற பல திருத்தங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன” என்று ஆரவ் கூறுகிறார். அவர் முதலில் உருவாக்கிய ஸ்பூனை ஆர்ஜன் பயன்படுத்தினார். அதன் பிடி வழுக்கும் தன்மை யுடன் இருப்பதாக அவர் கூறிய பின் ஸ்பூனின் பிடி உறுதியானதாக மாற்றியமைக்கப்பட்டது.
பொம்மைகள் ஏற்படுத்திய ஆர்வம்
அவருடைய தாயார் பத்தாண்டுகளுக்கு முன்பு விளையாட வாங்கித்தந்த லெகோ (Lego) பொம்மைகளில் இருந்து ஆரவிற்கு இயந்திர வியலில் ஆர்வம் ஏற்பட்டது. உலகளவில் நடந்த இருபதிற்கும் மேற்பட்ட ரோபோட்டிக்ஸ் போட்டி களில் ஆரவ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 2022 இல் ஜெர்மனியில் நடந்த உலக ரோபாட் ஒலிம்பியாட் போட்டியில் வருங்கால கண்டுபிடிப்பாளர்கள் பிரிவில் இந்த ஸ்மார்ட் ஸ்பூன் முதல் பரிசை பெற்றது. “இந்த கருவியை உருவாக்க அவசியமான மிக நுண்ணிய மின்னணு பாகங்கள் இந்தியா வில் கிடைக்காமல் போனது விரக்தியை ஏற்படுத்தி யது. பின்னர் சீனாவில் இருந்தே இவை இறக்கு மதி செய்யப்பட்டன. ஆனால் அவை வந்துசேர நீண்ட காலம் எடுத்துக்கொண்டது” என்று ஆரவ் கூறுகிறார். இந்தியாவில் ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐம்பது வயதிற்கும் மேற்பட்டவர்களில் பொதுவாக ஏற்படும் இந்த நோயால் மூளையின் பகுதிகள் தீவிரமாக சேதம டைகின்றன. உடற்பாகங்கள் தானாகவே கட்டுப்படுத்த இயலாத நிலையில் நடுங்குதல், தசை இறுக்கம் போன்றவை இதன் சில அறிகுறிகள். நோய் மோச மாகும்போது உணவு உண்பது கடினமாகிறது. அந்த நிலையில் இவர்கள் அன்றாடம் உணவு உண்ண அடுத்தவரின் உதவியை நம்பியே வாழ வேண்டியுள்ளது. இத்தகைய ஸ்மார்ட் ஸ்பூன் முதல்முறையாக இப்போது உருவாக்கப்படவில்லை. இது போன்ற வற்றை ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகின்றன. ஆனால் அவற்றின் விலை $200. இந்த விலை பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக அதிகமானது. பெருமள வில் தயாரிக்கப்படும்போது ஆரவின் ஸ்பூனின் விலை $80 மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
மனிதாபிமானத்துடன் ஒரு கண்டுபிடிப்பு
விரைவில் இது பற்றிய கட்டுரை ஒரு மருத்துவ இதழில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அப்போது இதை முதலில் சிறிய அளவில் உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். தேர்வுகளுக்காக படிக்கும்போதும் கூட தன் ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை ஸ்மார்ட் ஸ்பூன் திட்டத்திற்கே அவர் செலவழித்தார். பார்க்கின்சன் நோயால் அவதிப்படுபவர்கள் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த ஸ்பூன் இருக்கும்படி செய்யவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். ஒரு சின்னஞ்சிறிய பொருள் கூட ஒருவருடைய வாழ்வில் கண்ணியத்திற்கும் கண்ணியமற்ற தன்மைக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய வேறுபாட்டை எடுத்துக் காட்டுகிறது என்பதை ஸ்மார்ட் ஸ்பூன் மாமாவின் வாழ்வில் ஏற்படுத்திய பெரிய மாற்றத்தின் மூலம் உணர்ந்ததாக ஆரவ் கூறுகிறார். இந்த ஸ்பூனின் உற்பத்தி விரைவில் செயல்வடி வம் பெறும் என்று நம்பப்படுகிறது. மனிதாபி மானமும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வ மும் இருந்தால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வயது ஒரு தடையில்லை என்பதை ஆரவின் ஸ்மார்ட் ஸ்பூன் நிரூபித்துள்ளது. இந்த ஸ்பூன் மருத்துவத்துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.