tamilnadu

img

ஆசிய வல்லூறுகளை காக்க ஒரு சரணாலயம் -

செந்தலை வல்லூறு (Red headed vulture) என்று அறியப்படும் ஆசிய வல்லூறுகளுக்காக (Asian king vulture) உத்தரப்பிரதேசத்தில் ஒரு சரணாலயம் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய உலகின் முதல் சரணாலயம் இது. இங்கு வல்லூறுகள் பாதுகாக்கப்படுவதுடன் அவற்றின் இனப்பெருக்கத்தி ற்கான வசதிகளும் உள்ளன. கடுமையான இன அழிவு அச்சு றுத்தலை எதிர்கொள்ளும் இவை 2007 முதல் பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் உள்ளது. ஜடாயு பாதுகாப்பு மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இது உத்தரப்பிரதேசத்தில் மகா ராஜ்கஞ்ச்சில் செயல்படுகிறது. கழுகு களை 24 மணி நேரமும் கண்காணிக்க இங்கு வசதிகள் உள்ளன. ஊழியர்களில் ஒரு அறிவியல் அலுவலர், ஒரு உயிரியலாளர் ஆகி யோரும் உள்ளனர். வாழ்நாள் முழு வதும் ஒரு இணையுடன் மட்டுமே வாழும் இயல்புடைய இவை ஆண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. இத னால் இவற்றை இடைவிடாமல் கண் கணிக்க வேண்டியது இன்றியமை யாதது. இங்கு வாழும் கழுகுகளை ஆரோக்கியத்துடன் பராமரித்து பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கழுகுக்கும் ஒரு நேரத்திற்கு மூண்று கிலோ வீதம் இறைச்சி உணவாக கொடுக்கப்படுகிறது. பெண் பறவை முட்டையிட்ட பின் ஆண் பறவையை இயற்கையான வாழிடத்திற்கு கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது. காட்டில் திறந்துவிடப்படும் கழுகுகளுக்கு அனு பவக் குறைவு ஏற்படாமல் இருக்க சரணா லயத்தில் அவற்றின் இயல்பான வாழி டச் சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. கழுகுகள் வாழும் பகுதிக்குள் நுழைய ஒரு சமயத்தில் ஒரு ஊழிய ருக்கு மட்டுமே அனுமதி உண்டு. இங்கு கடுமையான சி சி டி வி கண்காணிப்பு உண்டு. நாட்டின் மற்ற சரணாலயங் களில் நீண்ட அலகுடைய கழுகுகள் (Gyps indicus)) மற்றும் வெண் முதுகு கழுகுகள்  (Gyps africanus)) பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வாழிட அழிவு, கால்நடைகளுக்கு வலி  நிவாரணியாக கொடுக்கப்பட்ட டைக்ளோபினாக் (Diclofenac) போன்ற மருந்துகள் வல்லூறுகளின் அழிவுக்கு முக்கியக்காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.