சென்னை, ஏப். 25 - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற வலியுறுத்தி மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறி விக்கக் கோரி செவ்வாயன்று (ஏப்.25) தமிழ்நாடு முழுவது முள்ள நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய இந்த போராட் டத்தின் ஒருபகுதியாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்க ளிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் கூறியதாவது: நாடு விடுதலை பெற்று 75 வருடங்களாகிறது. மொழிவழி மாநிலங்கள் அமைந்து 50 ஆண்டுகளை கடந்து விட்டது. இதற்கு பின்பும் உயர் நீதிமன்றங்க ளில், அந்தந்த மாநில மொழி களை அலுவல் மொழியாக மாற்ற ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.
இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் ஷரத்து 348(2)-ன்படி மாநில மொழிகளை, அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக மாற்ற வழிவகை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில் தமிழை அலுவல் மொழி யாக மாற்ற வலியுறுத்தி 2006ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதற்கு அன்றைய ஒன்றிய அரசும், குடியரசு தலைவரும் ஆதரவளித்த னர். உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், மாநில மொழிகளை அலுவல் மொழியாக மாற்ற வேண் டும். நீதிமன்ற விழாக்களின் போது, தமிழை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் முன்பு மாநில முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத் தில் மீண்டும் தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு களை பல்வேறு மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித் துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், உயர்நீதி மன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் இளங்கோ, சென்னை மாவட்டத் தலைவர் பாலசுப் பிரமணியம், செயலாளர் சீனி வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.