மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏகேஜி பவனில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செங்கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு ஊறுப்பினர்கள் பிரகாஷ் காரத், சுபாஷினி அலி, ஹன்னன் முல்லா மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் ஹேமலதா, மரியம் தாவ்லே, விஜு கிருஷ்ணன், முரளிதரன், அருண் குமார், விக்ரம் சிங், அவதேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
137ஆவது மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார். தொடர்ந்து கடந்தாண்டு மறைந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் தலைவர்கள்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் செங்கொடியை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வெ.ராஜசேகரன், இரா.சிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.