tamilnadu

img

சேரர் தலைநகரம் கரூர்?

அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள செங்காளிப்பாளையத் தில் ஓர் அரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கரூர் நகரத்தை ‘வஞ்சி மாநகரம்’ என்று குறிப்பிடுகிறது கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த கல்வெட்டு, முற்கால சேரர்களின் தலைநகரமாக வஞ்சி என்றழைக்கப்பட்ட கரூர் மாநகரமே இருந்திருக்கக்கூடும் என்றும் தற்போதைய கேரளத்தில் உள்ள கொடுங்கல்லூர் சேரர்களின் தலைநகராக இருந்திருக்காது என்றும் புதிய கருத்துக்கு  வித்திட்டிருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.