tamilnadu

லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்!

லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பொதுக்கூட்டம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில  இந்திய 24-ஆவது மாநாட்டின் நிறைவாக - ஞாயிறன்று மாபெரும் செந்தொண்டர் அணி வகுப்பு - பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பிற்பகல் 3 மணியளவில், மதுரை பாண்டி கோயில் ‘எல்காட்’ ஐ.டி. பார்க் (ELCOT IT PARK)  அருகிலிருந்து செந்தொண்டர்கள், அணி வகுப்பு துவங்குகிறது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செந்தொண்டர்கள் அணிவகுக்கின்றனர். அரசு அதிகார மையங்களின் கொடூர மான அடக்குமுறையை எதிர்கொண்டு, 30  ஆண்டுகளாக தீரத்துடன் போராடி வெற்றி கண்ட ‘வாச்சாத்தி போராளிகள்’ செந்தொண்  டர் அணிவகுப்பைத் துவக்கி வைக்கின்றனர். இ்ந்த செந்தொண்டர் அணிவகுப்பானது, மாலை 4 மணியளவில் தோழர் என். சங்க ரய்யா நினைவுத்திடலை (வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி - மஸ்தான்பட்டி- Vandiyur Ring Road - Masthanpatti) அடைகிறது. அங்கு தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்  கணக்கான உழைப்பாளி மக்கள் பங் கேற்கும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் தலைமையில் நடை பெறும் இந்த பொதுக்கூட்டத்தில், கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  கள் பிரகாஷ் காரத், கேரள முதல்வர் பின ராயி விஜயன், பிருந்தா காரத், ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முன்னதாக வரவேற்புக்குழுச் செயலா ளர் சு.வெங்கடேசன் எம்.பி. வரவேற்பு ரையாற்ற, நிறைவாக வரவேற்புக்குழு  பொருளாளர் மதுக்கூர் இராமலிங்கம் நன்றி யுரையாற்றுகிறார். புதுகை பூபாளம் கலைக்குழு, காம்ரேட் கேங்ஸ்டா இசைக்குழு, கன்னியாகுமரி முரசு  குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன.