மக்களுக்கு அநியாயங்கள், அக்கிரமங்கள் நிகழ்கிற போது அப்பகுதி மக்களுக்கு களத்தில் நின்று போராடும் கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்று தீண்டாமைக்கு எதிராகவும், சாதிய ஏற்றத் தாழ்வுக்கு எதிராகவும் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி போராட்டினால் சாதிய பாகுபாடுகளை களைய முடியும்.
திருவள்ளூர் மாவட்டம் ராஜா நகரத்தில் அரசு கொடுத்த நிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக தலித் மக்கள் குடியேற முடியவில்லை சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டாமா? பட்டியலினத்தவர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் இத்தனை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகின்றார். சட்டத்தை மீறுபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சொல்வது எப்படி சரியாகும்? குற்றம் செய்வதில் சிறுபான்மை, பெரும்பான்மை பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா?