ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் விதிமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் பெரும் வெற்றி
மதுரை, மே 30 - ரிசர்வ் வங்கியின் தங்க நகைக்கடன் விதி முறைகளை எதிர்த்த போராட்டத்தில் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் அறிவித்தார். வெள்ளியன்று மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியா ளர்களை சந்தித்த அவர், இரண்டு லட்சம் வரை நகைக்கடன் பெறுபவர்களுக்கு எந்த விதி முறையும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறி வித்துள்ளது என்று தெரிவித்தார். மூன்று காரணங்களால் மிகப்பெரும் வெற்றி “இன்றைக்கு நிதி அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒரு மிகப்பெரும் வெற்றி. மூன்று காரணங்களுக்காக நான் அதை தெரிவிக்கின்றேன்” என்று கூறிய சு.வெங்கடேசன், அந்த மூன்று காரணங்களை விளக்கினார்: “முதலாவது, ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறி வித்த அறிவிப்புக்கான அறிக்கை உடனடி யாக நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. இரண்டு, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறு பவர்களுக்கு எந்த விதிமுறையும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மூன்றாவது, இது எளிய மக்களை நடுத்தர மக்களை தாக்குகின்ற விஷயம் என்பதால் அனைவரின் கருத்தையும் கேட்டு முழுமை யாக ஆய்வு செய்த பின் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றுக்கு பின் தான் இது நடை முறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்கள்.” ஏப்ரல் 9 அறிவிப்பின் மோசமான விதிமுறைகள் இந்த வெற்றிக்கான பின்னணியை விளக்கிய அவர் மேலும் கூறியதாவது: “ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட்ட அந்த வரைவு அறிக்கை யில், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவித்தது பெரும் குழப்பத்தை உருவாக்கியது. இவை மிக மோச மான-ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கின்ற விதிகள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதுவரை நகை கடன் பெறுபவர்கள் அவர்கள் கொடுக்கும் நகை யின் மதிப்பில் 80 சதவீதம் கடன் பெறலாம் என்ற விதிமுறைகள் இருந்தது; புதிய விதிமுறை 80 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியது”. நகை உரிமை சான்று கேட்பது மிக மோசமான நடவடிக்கை நகை உரிமை சான்று கேட்பது குறித்து கடும் விமர்சனம் தெரிவித்த அவர் மேலும் கூறி னார்: “மிக முக்கியமானது நகைக்கான உரிமைச் சான்றிதழ். இது இன்னும் மோசமானது. நீங்கள் நகை கடனுக்காக போகும்போது அந்த நகை உங்களுடையதுதானா என்பதற்கான உரிமைச் சான்று தரப்பட வேண்டும் என்பது கடுமையான விதி. பெரும்பாலும் நகைகளை யாரும் அழிக்க மாட்டார்கள் ஒரு பெண் போட்டி ருக்கும் தங்கம் அவருடைய தாய் கொடுத்த தங்கமாக இருக்கலாம். பல தலைமுறைகள் மாறி அவை வந்திருக்கலாம். இது பல பத்தாண்டுகளாக தாய் மகளுக்கு கொடுப்பது, பேத்திக்கு கொடுப்பது என்று பல தலைமுறை கள் கொண்டது. இதற்கு ரசீது மற்றும் ஆவ ணங்கள் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி கொடுப்பது?” “மீண்டும் அந்த நகைகளை நாம் அழித்து, புதிய நகையை உருவாக்கி அதற்கு செய்கூலி சேதாரம் மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி கட்டி பின்னர் அந்த நகைக்கு ரசீது பெற வேண்டும்; அப்படி நகைக்கான சான்று வழங்க வேண்டும் என்பது மிக மிக மோசமான ஒரு நடவடிக்கை”. கடன் நோக்கம் கேட்பது மக்கள் மீதான தாக்குதல் “பிரிவு 12, இதுவும் மிக மிக மோசமான ஒன்று. என்ன காரணம் என்றால் ‘நகை கடன் பெறுவதற்கான காரணத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று சொல்கிறது. ஒருவர் தன்னு டைய பிள்ளையின் கல்விக்கடனுக்கோ அல்லது விவசாய கடனுக்காகவோ கடன் வாங்குவதற்கு அலைவாரா அல்லது கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்கள் கேட்டு அரசு அலுவலகங்களுக்கு அலைவாரா? எனவே இந்த பிரிவு 12 என்பது மக்கள் மீது தொடுக்கப் படும் ஒரு தாக்குதல்” என்று அவர் விவ ரித்தார். நிதியமைச்சரை சந்தித்த அனுபவம் தில்லியில் நிதியமைச்சரை சந்தித்த அனு பவத்தை பகிர்ந்த அவர் மேலும் கூறினார்: “ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை சம்பந்த மாக பல வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். ஒரு முறையான முழுமையான அறிக்கையை தயார் செய்து ஒன்றிய நிதி அமைச்சரை நேரிலே சந்தித்து பேசினோம். நிதியமைச்சர் அவர்கள் ரிசர்வ் வங்கி என்ன கருதுகிறது என்று சில விவரங்களை கூறினார்கள். அதை நாங்கள் கேட்டுக் கொண்டு, இது அடிப்படை யில் எப்படி மக்களை பாதிக்கக் கூடிய விஷயம்; ஒன்று தங்கம் வாங்கியதற்கான ரசீது கேட்பது, இரண்டு தங்கம் வைத்திருந்ததற்கான உரிமைச் சான்று கேட்பது, மூன்று வருமானச் சான்று கேட்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை வலியுறுத்தினோம். “நாங்கள் சொன்ன மூன்று நான்கு விஷ யங்களை நிதி அமைச்சர் அவர்கள் எடுத்துக் கொண்டு நாங்கள் ரிசவ் வங்கி அதிகாரிகளி டம் பேசிவிட்டு சொல்கிறோம் என்று கூறினார். எனவேதான் தில்லியில் உடனடியாக நான் ஊடகவியலாளர்களை சந்தித்து ஒரு நல்ல முடிவு வரும் என்று தெரிவித்தேன்”. இவ்வாறு அவர் விவரித்தார். அந்த அடிப்படையில் தற்போது, மேற்குறிப் பிட்ட வெற்றிகள் கிடைத்துள்ளன. இதை ரிசர்வ் வங்கியும் அரசும் உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, நகை மறுஅடகு வைத்து கூடுதல் கடன் பெறுவதற்கு, ஏற்கனவே அடகு வைத்த தொகையினை முழுமையாக செலுத்தி விட்டு, நகையை திரும்பப் பெற்று மறு அடகு வைக்க வேண்டும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த விதியும் எளிய மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத் துகிறது; எனவே அதையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தனியார் நிதி நிறுவனங்களின் திட்டமிட்ட சூழ்ச்சி “தற்போது மிகப்பெரும் நிதி சூறையாட லுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது கடந்த 10, 20 நாட்களாக எல்லா தனியார் நிதி நிறுவ னங்கள், வங்கியில் தங்க நகை அடகு வைத்து உள்ளவர்களை தொலைபேசியில் அழைத்து ‘நாங்கள் 90% உங்களுடைய நகை களுக்கு கடன் கொடுக்கிறோம்’ என்று பேசுகிறார் கள். ரிசர்வ் வங்கி தங்க நகைக்கான கடனை 80 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக குறைக்கின் றது; தனியார் நிறுவனங்கள் 80 சதவீதத்தி லிருந்து 90 சதவீதமாக அதிகரித்து வழங்கு கிறது; இது ஒரு திட்டமிட்ட வேலையாக நாங்கள் பார்க்கின்றோம்” என்றும் அவர் கூறினார். முற்றாக ரத்து செய்க! மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய மோடி அரசு 10-க்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறு வனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிறுவனங்கள், இந்தியா முழுவதும் பல்லா யிரக்கணக்கான கிளைகளை திறந்து கிராமப் புறங்களில் நுண்நிதி என்ற பெயரில், கடன் கொடுத்து ஏழை-எளிய மக்களை ஒட்டச் சுரண்டு கின்றன என குறிப்பிட்ட சு.வெங்கடேசன், மக்களை நுண்நிதி நிறுவனங்களிடமும் கந்து வட்டிக்காரர்களிடமும் கொண்டு போய் தள்ளு கிற அறிவுப்புகளை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசின் இத்தகைய நடவடிக்கைகள், உழைப் பாளி மக்களை உறிஞ்சுகிற நவீன தாராளமய கொள்கைகளின் விளைவுகளே என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம் என்றார். கீழடி அகழாய்வு: அறிவியல் உண்மையை அதிகாரத்திற்கு கீழ்ப்படுத்தும் முயற்சி கீழடி அகழாய்வு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை திருத்தம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த சு.வெங்க டேசன், “நாங்கள் முதலில் கலாச்சாரத் துறை அமைச்சகத்திற்கு சொல்லிக் கொள்வது, ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் ஆய்வினை நடத்தியவர் அகழாய்வில் கிடைத்த சான்று களை வைத்து முடிவுக்கு வந்து ஒரு ஆய் வினை சமர்ப்பித்துள்ளார்; அதை பல அறி ஞர்கள் கூறியதாகக் கூறி திருத்தம் செய்யச் சொல்வது சரியல்ல; அவர், எனக்கு கிடைத்த சான்றுகளை வைத்து நான் உண்மைக்கு வரு கிறேன். எனவே திருத்த முடியாது என்ற முடி வுக்கு வருகிறார். அதற்குப் பின்பும் நீங்கள் திருத்தம் கேட்பது எதற்கு? அறிவியல் உண் மையை அதிகாரத்திற்கு கீழ்ப்படிய செய் கின்ற முயற்சியை வன்மையாக கண்டிக் கிறோம்” என்றார். “இது அதிர்ச்சியானது; தமிழகத்தினுடைய வரலாற்றை கண்டறியும் பொழுது அதன் உண்மைகளை திருத்துகின்ற ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்றும் கூறினார். மக்கள் சந்திப்பு “ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை மதுரை மாநகரில் ஒன்றிய அரசு நிறை வேற்றாத திட்டங்கள், மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மக்கள் சந்திப்பு நடைபயண பிரச்சாரம் நடை பெற உள்ளது” என்றும் அவர் அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (ந.நி)