சென்னை, மே 2- வங்கக்கடலில் மே 7,8-ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலை வர் பாலச்சந்திரன் செய்தி ளார்களிடம் கூறினார். உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டத் தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். மேலும், தமிழ்நாட்டில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார். கூடுதலாக கோடை மழை! தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒரு சில மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. இந்நிலை யில், சில மாவட்டங்களில், மிதமான மழையும், ஒரு சில மாவட்டங்களில் மிகக் கன மழையும் பெய்து வருகின் றது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி இந்தாண்டு 78 விழுக்காடு மழை கூடுதலாக பெய்துள் ளது. மேலும், மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 காலை வரை வழக்கமாக 62.5 மி.மீ மழை பெய்யும் நிலையில் இந்தாண்டு 111.3 மி.மீ மழை பெய்துள்ளது.