சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றி யை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படும். இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியானதொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள் ஒரு கட்டுரை தொடரை கூட கதை போல சுவாரசி யமாக சொல்வதில் வல்லவர் என்பதை பாகம் ஒன்றில் வாசித்தோம். அது இரண்டாவது பாகத்திலும் தொ டர்வது சிறப்பானதொன்று. நாமறியாத உலகொன்றில் பயணித்து காக்கி சீருடைக் காரர் வெள்ளை சீருடை அணிந்தவர்களின் கறைபடிந்த கதைகளை மனித நேயத் தோடு அணுகி சட்டம் கிழித்த கோடுகளுக்குள் ளாகவே பயணித்து குற்றவாளிகளுக்குள் இருக்கும் கண்ணீர் கதையை எழுத்தாக்கம் செய்திருக்கிறார். நீண்டு கிடக்கும் பெரிய மதில்சுவர்களின் மீதேறி பெரும் பாம்பென படர்கிறது ஏதிலிகளின் வாழ்வு. மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளை விடுவிக்க சிங்களப் பிரதிநிதி ஒருவர் முயற்சிப்பதும் பணம் ஒன்றே பிரதான மென்று வாழும் ஆயுதம் தாங்கிய மிருகமொன்று பணத்தை பிடுங்கித் தின்பதும் கடைசியில் கொடுக்க பணம் இல்லாத போது அவரையே சுட்டு வீழ்த்துவதும் அதிகார வர்க்கங்கள் நினைத்தால் எவர் வாழ்விலும் குழி வெட்ட முடியும் என்பதை மனம் பதைபதைக்க கூறிச் செல்கிறார். ஒரு அரசு ஊழியராக இருந்த போதும் அரசின் பக்கம் சாயாமல் நியா யத்தின் பக்கம் நின்று நீதியின் நடுமுள் நடுங்காமல் உண்மையை பதிவு செய்தி ருக்கிறார். எல்லா அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் கடமையை சீரிய முறையில் செய்யத் துவங்கி விட்டால் உலகம் நேரிய முறையில் நின்று சுழலும். 8 மணி நேர வேலை குறித்த விரிவான ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் தனி ஒரு நபராக துவங்கி மதுரைநம்பி உட்பட தமிழ்நாட்டில் உள்ள பிற காவலர்களுக்கும் பரவி ஒரு கட்டத்தில் 8 மணி நேர வேலைச் சட்டம் அமலானதை விரிவாக எழுதி உள்ளார். எழுத்தாளர் மதுரை நம்பி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
பாகம் 2
நூலாசிரியர்
மதுரை நம்பி
பக்கம் : 208
விலை : 250
வெளியீடு:
டிஸ்கவரி புக் பேலஸ்