மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தில் 200 நாட்கள் வேலை மற்றும் தினசரி ஊதியம் 600 ரூபாய், அனைத்து ஏழைகளுக்கும் நிரந்தர கட்டுமான வீடுகள் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்க மாநிலம் தர்மதாலாவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச்செயலாளர் பி.வெங்கட், மேற்கு வங்க மாநில தலைவர் துஷார் கோஷ், தோழர்கள் அமியா பத்ரா, பிகாஸ்ரஞ்சன் பட்டாச்சார்யா,நிராபடா சர்தார், பன்யா துடு ஆகியோர் உரையாற்றினர்.