வெம்பக்கோட்டை அருகே உள் ளது விஜயகரிசல்குளம். இங்கு 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டன. அத னைத் தொடர்ந்து வெம்பக் கோட்டையில் முதல்கட்ட அக ழாய்வு பணிகளுக்காக தமி ழக அரசானது ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழிகளில், நுண் கற்காலம் முதல் இடைக் கற்காலம் வரை இப்பகுதி யில் மனிதர்கள் வாழ்ந்ததற் கான பல்வேறு அடையாளங் கள் கிடைத்தன. அதன்படி தங்க அணிகலன், சுடுமண் ணாலான முத்திரை, ஆண் உருவம், சுடுமண்ணாலான சங்ககால முத்திரை,
முழு சங்கு வளையல், இருபுறமும் உருவம் பதித்த செப்பு நாண யம் உள்ளிட்ட மூவாயிரம் வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவ ணப் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்ரல் 6 அன்று முதல் வர் மு.க.ஸ்டாலின் காணொ லிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைர்த தொடர்ந்து நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தற்போது வரை சுடுமண்ணா லான புகைபிடிப்பான், கல் லால் ஆன எடைக்கல், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, பானைகள், மூடி, பச்சை, வெள்ளை நிற பாசி மணிகள் மற்றும் மெருகேற்றும் கற் கள் என ஏராளமான தொன் மையான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆகஸ்ட் 17 வியாழனன்று நடைபெற்ற அகழாய்வில், 56 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத் தாலி ஆபரணம் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த அணிகலனில் 40 சதவீதம் மட்டுமே தங்கம் கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதை நமது முன்னோர்கள் மிகவும் நேர்த்தியான முறையில் வடி வமைத்து பயன்படுத்தி உள்ள தாகவும் அகழ்வாராய்ச்சியா ளர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே, முதற்கட்ட அகழாய்வுப்பணியின் போதும் ஒரு தங்க ஆபர ணம் கிடைத்தது, அதேபோல் இரண்டாம் கட்ட அகழாய் வின் போதும் தங்க அணி கலன் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளதால் மிகவும் உற் சாகமடைந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.