சாலையோர வியாபாரிகளை, அவர்களது துயரங்களை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. மார்க்கெட்டுகளில், வாரச் சந்தைகளில், சாலையோரங்களில் குவியல் குவியலாக உள்ளூர் வியாபாரிகளும், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வரும் வியாபாரி களும் சிறு, சிறு வணிகங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். தமிழகத்தில் இரண்டாம் பெரும் நகரமான மதுரை மாநகரில், மேற்கண்ட சிறு வியாபாரிகளைத் தவிர, உள்ளிடை தெருக் களில், வீடுகளின் வாசல்களில் இட்லி வியா பாரம், தேங்காய், காய்கறிகள் வியாபாரம், இட்லி மாவு விற்பனை, தெரு தெருவாக கூடை களில் பழங்கள், மீன்கள் வைத்து நடந்தே சென்று தலைச் சுமையாக வியாபாரம் -இப்படி பல்வேறு வகைகளில் வியாபாரம் செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் ஜீவனம் செய்து வருகின்றனர்.
70% பெண்கள்
இந்த வியாபாரத்தில் பாமர மக்களும், படித்த இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்ற னர். 70 சதமானம் பெண்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதவைப் பெண்கள், கணவ னால் கைவிடப்பட்ட பெண்கள், தனித்து வாழும் பெண்கள் உட்பட பெண்கள் மட்டும் 40 சதமானம் பேர் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியின் சார்பில் மதுரை யில் சாலையோர வியாபாரத்தில் ஈடுபடு பவர்கள் 20 ஆயிரம் பேர் என கணக்கெடுத்துள்ள னர். ஆனால் உண்மையில் டோக் பெருமாட்டிக் கல்லூரி மாணவிகள் மதுரை மாநகரத்தில் சாலையோர வியாபாரிகளை சந்தித்து ஆய்வு செய்ததில் இந்த எண்ணிக்கை அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மதுரை மாநகர சாலை யோர வியாபாரிகள் பற்றிய பல நுட்பமான தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக சாலையோர வியாபாரிகளில் பெரும்பாலானோ ரின் தினசரி வியாபார வரவு-செலவு வெறும் ரூ.500க்கும் கீழ் தான். கல்லூரி மாணவிகள் விரிவான கள ஆய்வு செய்து, விபரங்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் ஆவணமாக கொடுத்தனர்.
அன்றாடம் செத்துப் பிழைப்பது...
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 70 சதமானமாக உள்ள முறைசாரா தொழிலாளர்களின் பங்களிப்பில், இந்த சாலை யோர வியாபாரிகளின் வாழ்க்கை அன்றாடம் செத்துப் பிழைக்கும் பிழைப்பாக; கடன் வாங்கி, கடனுக்கு வட்டி கட்டி அது போக மீதம் இருக்கும் மிச்சசொச்ச வருவாயைக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். காவல்துறை ஒரு பக்கம் வியாபாரம் செய்ய விடாமல் விரட்டுகிறது. மாநகராட்சி அதிகாரி கள் ஒரு பக்கம் கடை போட விடாமல் தடுக்கக் கூடிய நடவடிக்கைகள். இவற்றையெல்லாம் மீறி இவர்கள் கடை நடத்தி, பல நேரங்களில் காவல்துறைக்கு பெட்டிகேஸ் என்ற பெயரில் மாதம் ஒருமுறை ‘பணம் கட்டி’ வியாபாரத்தை செய்து வருகிறார்கள்.
நம்பிக்கை ஒளியாக சிஐடியு
இந்தப் பின்னணியில் தான் தொழிலாளர் களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரக்கூடிய இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் 1999இல் மதுரை மாநகரில் சாலையோர வியாபாரிகள் சங்கம் உரு வாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் வியா பாரம் செய்வதற்கும்,காவல்துறை மற்றும் அதி காரிகளின் கெடுபிடிகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதிலும் சாலையோர வியாபாரி களின் வாழ்க்கையை மேம்படுவதற்காகவும், தொடர்ந்து போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் சாலையோர வியாபாரிகள் பாது காத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014 இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் விதமாக அரசாணை 159/2015 வெளியிடப் பட்டது. அதிலே விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. அந்த விதிமுறைகளின்படி சாலை யோர வியாபாரிகளுக்கான ‘வெண்டிங் கமிட்டி’ உருவாக்குவதற்கான தேர்தலை நடத்துவது, அந்த வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களுக்கான அதிகாரம் உள்ளிட்ட பல விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. ஒவ்வொரு மாநகராட்சியிலும் இந்த வெண்டிங் கமிட்டி தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. 15 பேர் கொண்ட வெண்டிங் கமிட்டியில் 6 பேர் சாலையோர வியாபாரி களால் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட கூடிய வியாபாரிகள் ஆவர். மீதமுள்ள 9 பேர் அரசு அதிகாரிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என நியமிக்கப்படுகிறார்கள். சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளை இடம் மாற்றவோ, சாலையோரம் வியாபாரம் செய்பவர்களை அப்புறப்படுத்தவோ இந்த வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களிடம் கலந்தா லோசிக்காமல் செய்யக்கூடாது என்றெல்லாம் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
‘வெண்டிங் கமிட்டி’
மதுரை மாநகராட்சியில் 19-01-2019 அன்று வெண்டிங் கமிட்டி தேர்தல் நடைபெற்று, அதிலே இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டிலேயே மதுரை மாநகராட்சியில் தான் முதல் வெண்டிங் கமிட்டி உருவாக்கப்பட்டது. வெண்டிங் கமிட்டி உரு வாக்கப்பட்டதற்கு பின்பு வியாபாரிகளுக்கான உரிமைகளை, சலுகைகளை, உதவிகளை பெற்றுத் தர சங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு உலகம் முழுமைக்கும் ஏற்பட்ட கொரோனா பெருந் தொற்று காலத்தில் சாதாரண உழைப்பாளி மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல், சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல், பரிதவித்து வீட்டிலே முடங்கிக் கிடந்த பொழுது, வருமானம் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளான பொழுது, அரசு மாதம் ரூ. 5000/- வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என சிஐடியு கோரிக்கை வைத்து இயக்கங்களை நடத்தியது. இதன் அடிப்படையில் சாலையோர வியா பாரிகளுக்கு ரூ.5000/- கடன் உதவி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. இது சிஐடியு-வின் போராட்டத்தின் விளைவாக அந்த வியாபாரி களுக்கு பெற்றுத் தரப்பட்டது. மேலும் சாலை யோர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய சாலையோர வியாபாரிகள் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி சிறியதும், பெரியதுமான நான்கு சக்கர வண்டிகள் பெற்றுத் தரப்பட்டன.
பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அமலாக்கிய பாங்கு
இதில் துவங்கி, இன்று மதுரையின் சாலை யோர வியாபாரிகள் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கடனுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கமும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களும், சாலையோர சிறு வணிகத் தொழிலாளரின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளனர் என்றால் மிகையல்ல. ஒன்றிய அரசின் ‘பிஎம் ஸ்வநிதி’ திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரி களுக்கு ரூ10,000, 20000, 50000 என மூன்று கட்டங்களாக கட்டி முடிக்க முடிக்க கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வங்கிகள் பிணை ஏதும் கேட்கக்கூடாது. சாலையோர வியாபாரிக்கான அடையாள அட்டை இருந்தால் போதும் என்பது தான் நிபந்தனை. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து இந்த கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனை வியாபாரிகளுக்கு பெற்றுத் தருவதி லும் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் பெரும் முயற்சி எடுத்து பெற்றுத்தந்து வந்துள்ளது. இந்த அடிப்படையில், சு.வெங்க டேசன் எம்.பி., முன் முயற்சியில் மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கான மத்திய அரசின் “பி.எம் ஸ்வநிதி” திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சு.வெங்கடேசன் எம்.பி.யின் தொடர் தலையீடு
இம்முகாமை சிறப்பாக நடத்தி விண்ணப்பித்த அனைத்து சாலையோர வியா பாரிகளும் கடன் பெறும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக சு.வெங்கடேசன் எம்.பி., சிரத்தை எடுத்து 5 முறை மாநக ராட்சி அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், மற்றும் வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி திட்டமிட்டார். 18-11-2023 அன்று காலை 10 மணிக்கெல்லாம் முகாம் நடைபெற்ற தமுக்கம் கலையரங்கில் சாலையோர வியாபாரிகள் குவிய தொடங்கி னர். அவர்களின் முகம் மலர்ந்துஇருந்தது. இதுவரை வட்டிக்காரர்களிடம் சிக்கி யிருந்த சிறு வியாபாரிகள்; சம்பாதிக்கும் பணத்தை வட்டிக்கே கொடுத்து வந்த நிலையில் இருந்து மாறி குறைந்த வட்டியில் வங்கி மூலமாக இக்கடனுதவி கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தனர். பொதுவாக வங்கிகள் சாதாரண ஏழை மக்களுக்கான கடன் வழங்கக்கூடிய சட்டங்கள் இருந்தாலும் கூட அந்தக் கடனை பெற முடியா மல் இருப்பதற்கு என்னென்ன தடைகளை ஏற்படுத்த முடியுமோ அதை ஏற்படுத்து வார்கள். இங்கேயும் அப்படி தடை ஏற்படுத்த சிலர் முனைந்தனர். “சாலையோர வியாபாரி களுக்கான அடையாள அட்டை இருந்தால் தான் கடனுதவி பெற முடியும்” என இருந்தது. ஆனால் மதுரை மாநகராட்சியால் கணக் கெடுத்த 16,000 பேருக்கு அடையாள அட்டை தருவதற்கு புகைப்படம் எடுக்கப்பட்டும் ஏதோ காரணத்தால் இன்னும் அடையாள அட்டை கொடுக்கப்படாமல் உள்ளது. எனவே அடை யாள அட்டை இல்லை என்று கூறி கடன் கொடுக்க மறுப்பது ஏற்புடையதல்ல என தலை யிட்டு; மாநகராட்சியிடம் சிபாரிசு கடிதம் பெற்றுக்கொண்டு கடன் வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீடு செய்து இலகுவாக கடன் கிடைக்க இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் 10000 பேருக்கு மேல் ரூபாய் 10 கோடி அளவிற்கு கடன் வழங்கப் பட்டுள்ளது. நிகழ்ச்சி நடந்த 18.11.2023 அன்று மட்டும் 151 பேருக்கு 21,40,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்குவதிலும், மதுரை மாவட்டத்தை முதல்நிலைக்கு அழைத்துச் சென்றார். அதே போல மாற்றுத்திறனாளிகளுக்கான உபகர ணங்கள் வழங்குவதிலும் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் வழங்கிய மாவட்ட மாக மதுரை மாவட்டத்தை மாற்றிக் காட்டினார். அந்த வரிசையில் சாலையோர வியாபாரி களுக்கான இந்த கடன் வழங்கும் முகாமிலும் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
நெகிழ்வான வாழ்த்துக்கள்
இந்த முகாமில் பங்கெடுத்த வயதான சாலை யோர வியாபாரியான மூதாட்டி ஒருவர் கடனைப் பெற்றுக் கொண்டு, இரு கரங்களைக் கூப்பி “இதுபோன்ற திட்டங்கள் இருப்பதை வெளியே காண்பித்து எங்களுக்கு கடன் உதவியை பெற்று தந்து உதவி செய்த நீங்கள் நல்லா இருக்க ணும் ஐயா” என்று வாழ்த்திவிட்டு சென்றது நாம் செய்கின்ற பணியின் அர்த்தத்தை விளக்கி யது. இந்த கடன் வழங்கும் முகாம் மதுரை மாநகர சாலையோர வியாபாரிகளுக்கு பெரும் உதவியாக அமைந்தது என்றால் மிகையல்ல. பெரும் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை வராக்கடன்களாக தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு இதுபோன்ற ஏழை,எளிய மக்கள் - கடன் பெற்ற சாலையோர வியாபாரிகளில் 60 சதமானம் பேர் முறையாக கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார்கள் என்ற விபரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விட இக்கடன் முகாம் பெரிய உதவியாக அமையும் என்பது அனைவரின் பேச்சாக அமைந்தது. இறுதியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும், வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து முகாமை நிறைவு செய்தனர்.