tamilnadu

img

மயிலாடுதுறையில் சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமம்

மயிலாடுதுறை, நவ.29- சாதி மறுத்த 100 இணையர்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மயிலாடுதுறையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சாதியை மறுத்து திருமணம் செய்த இணையர்களை பாராட்டி நினைவுபரிசு, புத்தகங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  முன்னதாக  மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் எஸ்.இளங்கோவன் வரவேற்று பேசினார். மாவட்டத்தலைவர் சி.மேகநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் நோக்கம்  குறித்து மாநிலச் செயலாளர் பா.சுகந்தி உரையாற்றினார்.   மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சி நாதன், மாவட்டத் துணை தலைவர் ஜி. ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிந் தனர். வண்ணங்களின் சங்கமம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றி னார். நாகப்பட்டினம், திருவாரூர்,  தஞ்சாவூர், திருச்சி (புறநகர்,மாநகர்), பெரம்பலூர், அரியலூர், புதுக் கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங் களிலிருந்து “சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்கள், அமைப்பின் மாவட்டச்செயலாளர்கள்,பொறுப்பாளர்கள்   உற்சாகமாக கலந்துகொண்ட னர். நிறைவாக மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.விஜய் நன்றி கூறினார்.

;