tamilnadu

img

உயிர்ப்போடு பேசும் மரச் சிற்பங்களும் தம்மம்பட்டி கலைஞர்களும்

சுமார் 60 குடும்பங் கள் 200 கைவினைஞர் களைக் கொண்ட குடும்பம். இவர்கள் ஆண்டவர் மற்றும் அவரது சகோதரர்களின் வழித் தோன்றல்கள். இவர்கள் 1942-ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிரா மங்களில் உள்ள கோவில் பணி யாளர்களிடம் மர வேலைப்பாடு களைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொல்லி மலை- பச்சைமலையின் பசுமை யான மலைகளுக்கு இடையே உள்ளது. தம்மம்பட்டி கிராமம்.  இங்கு இன்றைக்கும் பாரம்பரிய மான மர கைவினைஞர்கள் வசிக் கின்றனர்.  ஒரு உளியும் சுத்தியலும் தான் அவர்களுக்கான கருவிகள். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கிய தனித்துவமான சிற்பக் கலைக்கு இன்றும் உயிர்கொடுத்து வருகின்றனர்.

கிராமக் கோவிலுக்கான தேர்

700 ஆண்டுகள் பழமையான தாகக் கூறப்படும் கிராமத்தின் உக்ர காதலி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு தேர் அமைப்பதில்  இவர்களது மூதாதையர்கள் மரவேலை சிற்பப் பணியை தொடங்கியுள்ளனர். பாரம்பரியம் மிக்க திராவிட கட்டிடக்கலை, சிற்பங்கள் மற்றும் சிலைகள் பழங்காலத்தில் கல்லால் உருவாக்கப்பட்டவை. இவற்றை இன்றைக்கும் தென்னிந்தியா முழு வதும் உள்ள பல்வேறு கோவில் களில் காணமுடிகிறது.  பின்னர், உலோகம் பிரபலமடைந்தது, சோழர் காலத்தில் புகழ்பெற்ற நடராஜர் சிலைகள் வெண் கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. கல்லால் சிற்பத்தை உருவாக்கு வதை விட, பொருட் செலவில் வெண்கலத்தால் ஆன உரு வங்களைத் தயாரிப்பதை விட மரத்தில் இத்தகைய சிற்பங்களை உருவாக்கினால் என்ன என்று யோசித்ததன் வெளிப்பாடு தான் மரங்களில் உருவான சிற்பங்கள்.  குறிப்பாக சேலம் மாவட்டத் தில் பச்சைமலை-கொல்லிமலை பகுதியில் வாகை மரங்கள் (அல்பி சியா லெப்பெக்) இருப்பதை முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர் என்கிறார் ஆண்டவரின் பேரனும் மூன்றாம் தலைமுறை கைவினை ஞருமான பி.செங்கோட்டுவேல். மரச்சிற்ப வேலைபாடுகள் குறித்து அவர் மேலும் கூறிய தாவது:-.

எங்களது மூதாதையர்கள் கோவில்களுக்கான தேர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்று மற்றும் நான் காவது தலைமுறையாக நாங்கள் மரச்சிற்பப் பணியை செய்து வருகிறோம். பொதுவாக சிற்பங்களைச் செதுக்குவதற்கு வாகை மரத்தை  பயன்படுத்துகிறோம். கோவி லுக்குத் தேவையான சிற்பங் களை செதுக்குவதற்கு அத்தி, வேங்கை மரங்களையும்  வீடு களுக்குத் தேவையான அலங்கார வடிவமைப்புகளுக்கு  தேக்கு மரங்களையும் பயன்படுத்து கிறோம். முதலில் மரத்தின் மீது சாக்பீசால் ஓவியத்தை வரை வோம். இதன் மூலம் எங்களுக்கு ஒரு “ஐடியா” தோன்றும். பின்னர் சாக்பீசால் வரையப்பட்ட ஒவியத்தின் மீது ஸ்கெட்ச் பேனா வில் அழுத்தமாக வரைவோம். பின்னால் சுத்தியலாலும், உளி யாலும் சிற்பங்களைச் செதுக்கு கிறோம். இரண்டடி உயரம் கொண்ட ஒரு மரச்சிற்பத்தை உருவாக்க ஆறுநாட்கள், மூன்றடி உயரம் கொண்ட சிற்பத்தை உருவாக்க ஒன்பது நாட்கள் முதல் பத்து நாட்கள் வரை ஆகும்.

நாங்கள் வடிக்கும் சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும் இந்தியாவில் உள்ள அரசு உயர் அதிகாரிகளால் வாங்கப்பட்டு முறைப்படி அனுப்பி வைக்கப்படுகின்றன. மரச்சிற்பங்கள் குறைந்தது ரூ.3,500 முதல் ரூ. 4 லட்சம் வரை  உள்ளது. இவற்றை வசதி படைத்தவர்களே வாங்கும் நிலை  உள்ளது. தற்போது சேலம் மாவட்ட குறுந்தொழில்கள் துறை சார்பில் நவீன இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சி யில் ஈடுபட்டுள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர். இதற்காக ரூ.8  கோடி வரை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நவீன கருவிகள் வந்தால் சாதாரண ஏழை-எளிய மக்களும் மரச்சிற்பங்களால் உரு வாக்கப்பட்ட கடவுள் சிலைகள் அல்லது அவர்கள் விரும்பும் வடி வங்களை உருவாக்கிக் கொடுக்க முடியும். அதுவும் ரூ.50 முதல் ரூ.100 விலையில்’’ என்றார்.

பெண்களின் பங்களிப்பு அதிகம்

இந்தத் துறையில் ஆண் களுக்கு நிகராகப் பெண்களும் ஈடுபட்டிருப்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். பெண்களும் உளி களைப் பயன்படுத்தி சிற்பங் களை செதுக்குவதற்கு பழகிக் கொண்டிருந்தாலும், தற்போது மரத்தை செம்மைப்படுத்துவது, மரத்தின் மேற்பரப்பை மணற்த்து கள் கொண்ட காகிதம் (எமரி பேப்பர்) மூலம் பளபளப்பாக்கு வது, கலைப்பொருட்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு வேலைப் பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்கள் நிறுவப்பட்டுள்ளன. இதையும் இவர்தான் வடி வமைத்துக் கொடுத்துள்ளார். இவை தமிழகத்தின் பண்பாடு, நாகரீகத்தை வெளிநாட்டுப் பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் உள்ளது எனப் பெருமிதம் கொள்கிறார்.

கடவுள் சிலைகள் மட்டுமல்ல தலைவர்கள் உருவங்களையும் இவர் உருவாக்கியுள்ளார். வீட்டி ற்குத் தேவையான அலங்காரப் பொருட்களையும் தயாரித்துக் கொடுக்கின்றனர். குறிப்பாக மதுரையிலுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் யாழி இவர்கள் உருவாக்கியது தான் என்பது கூடுதல் தகவல். தமிழகத்திற்கு வருகை தர உள்ள குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்முவுக்கு பரிசளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப் பட்டதன் அடிப்படையில் சமய புரம் மாரியம்மன் கோவிலை உரு வாக்கிக் கொடுத்துள்ளார் செங்கோட்டுவேலு. இந்தப் பணியில் ஒரு சதவீதம் கூட இயந்திரம் பயன்படுத்தப் படாதது தான் தனிச்சிறப்பு.