தமிழகத்தின் தலை நகரில் நெடுங்கால மாக இயக்கப் பணி யாற்றி, இன்றைக்கும் கட்சி உறுப்பினராகச் செயல்பட்டு வரும் பல தோழர்களை இத்தொ டரில் சந்தித்திருக்கி றோம். இப்போது தோழர் பெரியசாமி. விருதுநகர் மாவட்டம் செவல்பட்டி கிராமத்தில் 1938இல் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பெரியசாமி. 8ஆவது வரை பள்ளிப்படிப்பு. விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாததால் குடும்பம் நெருக்கடி யில் இருந்த பின்னணியில் தனது 13ஆவது வய தில் கிராமத்தை விட்டு வெளியேறி பிழைப்ப தற்காகவென சென்னை வந்து சேர்ந்தார். சென்னையில் துவக்கத்தில் திருவொற்றி யூர் பகுதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை க்குச் சேர்ந்தார். அடுத்த சில ஆண்டுகளில் தனது நண்பர்களது ஆலோசனையின் பேரில் ஓட்டுநர் பயிற்சி பெற்று, திருவொற்றியூர் நக ராட்சியில் வாகன ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். அந்த வேலையில் மனநிறைவு ஏற்படாமல் இருந்தது. 1973 ஆம் ஆண்டு மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுந ராக வேலையில் சேர்ந்தார். 1970களில் சென்னையிலும் புறநகர் பகுதி களிலும் சிம்சன், எம்.ஆர்.எப், லேலண்ட், விம்கோ போன்ற ஆலைகளில் தொழிலாளர் களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் நடை பெற்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்கு வதற்கு சென்னை உள்ளிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் அடக்குமுறைகள் ஏவப்பட்டன. போராடிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டு,
பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய ஒடுக்குமுறை களை மீறி வெற்றிகரமாக நடந்த போராட்ட ங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி. சிந்தன் முக்கிய பங்காற்றினார். அவர்தான் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்திற்கும் தலைவராக இருந்தார். இயற்கையாகவே இத்தகைய பின்னணி போக்குவரத்துத் தொழி லாளர்கள் மனங்களில் போர்க்குணத்தை உருவாக்கி வளர்த்தது. வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே பெரியசாமி சிஐடியு சங்கத்தில் உறுப்பினரா னார். வாயிற்கூட்டங்களிலும் பொதுக்கூட்டங் களிலும் தோழர்கள் வி.பி.சிந்தன், கே.எம். ஹரிபட் ஆகியோரது எழுச்சி மிக்க உரை களைக் கேட்டதும், சங்கத்தின் பொறுப்பாளர் களாக இருந்த பூ. நாராயணமூர்த்தி, ஆர்.எம். செல்வராஜ் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டதும், இவர்களோடு உரையாடல்கள் நடத்தியதும் இவரை ஒரு கம்யூனிஸ்ட்டாக ஆக்கின. வேலையில் சேர்ந்த அந்த ஆண்டி லேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். “கட்சியில் உறுப்பினரானது எனது வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான திருப்பம்,” என்று நெகிழ்வோடு குறிப்பிடுகிறார் தோழர் பெரியசாமி.
சங்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட பெரி யசாமி திருவொற்றியூர் பணிமனை கிளை துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து போக்குவரத்து அரங்க திரு வொற்றியூர் கட்சிக் கிளை செயலாளராகவும் தேர்வானார். அடுத்து நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் அரங்க இடைக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கும் தேர்வானார். கட்சியும் சங்க மும் அறைகூவல் விடுத்த எல்லாப் போராட்டங் களிலும் தவறாமல் பங்கேற்றார். போனஸ் உட்பட போக்குவரத்துத் தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக் கான போராட்டங்களில் கலந்து கொண்ட தற்காகப் பலமுறை மற்ற தொழிலாளர் களோடு பெரியசாமியும் கைது செய்யப்பட்டு 13 நாட்கள், 14 நாட்கள், 15 நாட்கள் என சிறை யில் இருந்திருக்கிறார். இவ்வாறு கைது செய்யப் படுவதாலும், கட்சி வேலை மற்றும் சங்க வேலைக்காக விடுப்பெடுத்துச் செயல்படுவ தாலும் ஏற்படும் ஊதிய இழப்பு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. குடும்பத்தை நடத்து வதற்காக வாங்கிய கடன்களும் சுமையாக மாறின. இப்பின்னணியில் வேலையிலிருந்து விருப்ப ஓய்வில் வெளியில் வந்து முழுநேர ஊழியராகச் செயல்பட விரும்புவதாகக் கட்சித் தலைமைக்கும், சங்கத் தலை மைக்கும் தெரிவித்திருக்கிறார். 1993 ஆம் ஆண்டு லேலையிலிருந்து விலகினார். தோழர் பெரியசாமி பணியில் இருந்த போதே திருவொற்றியூர் - மணலி - எண்ணூர் பகுதிகளை உள்ளடக்கிய கட்சியின் இடைக் குழுவிற்கு அழைப்பாளராக அழைக்கப்பட் டார். (தோழர் எம்.கிருஷ்ணன் இடைக்குழுவின் செயலாளராக இருந்தார். அவரையும் ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் சந்தித்திருக்கிறோம்.) வேலையிலிருந்து விலகிய பிறகு இடைக்குழு உறுப்பினராக இணைக்கப்பட்டதோடு, அதன் முழுநேர ஊழியராகவும் பொறுப்பளிக்கப்பட்டார். மணலி இடைக்குழு தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு அந்தக் குழுவின் முழுநேர ஊழியராகத் தொடர்ந்து பல ஆண்டுகள் செயல்பட்டார். கட்சியின் மணலி பகுதிக்குழுவிற்கென இடம் வாங்கி அலுவலகம் கட்டப்பட்டதில் பெரிய சாமிக்கு முக்கியமான பங்குண்டு.
திருவொற்றியூர், மாதவரம், மணலி, அம்பத்தூர், ஆவடி ஆகிய சென்னை புறநகர் பகுதிகளில் விவசாயிகளைத் திரட்டுவதற் காக அமைக்கப்பட்ட விவசாயிகள் சங்க மாவட்டக்குழுவின் செயலாளராக பெரியசாமி செயல்பட்டார். விவசாயிகள் கோரிக்கைகளுக் கான பல போராட்டங்களை அக்காலத்தில் முன்னின்று நடத்தினார். விவசாயிகள் சங்கம் நடத்திய அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கட்சிக் கிளைகள் உருவாக்கப்பட்டன. பெரியசாமி-ராஜம்மாள் திருமணம் 1959இல் நடைபெற்றது. இணையர் ராஜம்மாள் கட்சி உறுப்பினரானார். அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளராக வும் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார். இப்போதும் கட்சி உறுப்பினராக, மாதர் சங்கத்தின் அங்கமாக இருக்கிறார். பெரியசாமி - ராஜம்மாள் இருவருக்கும் லட்சுமி, கவிதா என இரண்டு மகள்களும், ரவி என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இரு வரும் கல்வி பயின்ற காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி யிருக்கிறார்கள். தோழர் பெரியசாமி தனது இரண்டு மகள்களுக்கும் சாதி மறுப்புத் திரு மணம் செய்து வைத்தார்
. மகள்கள், மகன், மருமகன்கள் அனைவரும் கட்சியின் அங்க மாக இருக்கிறார்கள். மகன் ரவி கட்சி உறுப்பின ராகவும், வாலிபர் சங்க பகுதிக்குழு உறுப்பின ராகவும் செயல்பட்டார். தற்போது வேலைக் காக வெளிநாடு சென்றுள்ளார். ஆம், தோழர் பெரியசாமி குடும்பம் கட்சிக் குடும்பம். நகராட்சியில் வாகன ஓட்டுநராக, அரசு போக்குவரத்தில் ஓட்டுநராக, சிஐடியு போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் பணிமனை நிர்வாகியாக, கட்சிக் கிளை செயலாளராக, போக்குவரத்து அரங்க இடைக்குழு உறுப்பின ராக எனப் பல பொறுப்புகளில் திறம்படச் செயல் பட்டவர் தோழர் பெரியசாமி. கைதுகள், சிறை, தற்காலிக வேலை நீக்கம் போன்ற அடக்கு முறைகளை எதிர்கொண்டு உறுதியாகப் போராடியவர். விருப்ப ஓய்வில் அரசு போக்கு வரத்துக் கழகத்திலிருந்து விலகி கட்சியின் முழுநேர ஊழியரானவர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகப் பங்க ளித்தவர். தற்போது உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தம்மால் இயன்ற பணி களைச் செய்து வருகிறார். 85 வயதாகும் தோழர் பெரியசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்திற்காக ஆற்றிவரும் களப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.
அடித்தளம் அமைத்த தோழர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் சிஐடியு சங்கம் துவங்குவதற்கு முன்னதாக தோழர் ஏ.எஸ்.கே. அய்யங்கார் தலைமையில் செங்கொடி சங்கம் இயங்கி வந்தது. ஒரு போராட்டத்தின்போது நிர்வாகம் 52 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. அந்தத் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்க வேண்டுமென்று வி.பி. சிந்தன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஒரு பகுதியினருக்கு வேலை கிடைத்தது. மற்றவர்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. அப்போது தொழிலாளர்களிடையே பேசிய தோழர் சிந்தன், “ஒரு தொழிலாளிக்கு சங்கத்தால் வேலை வாங்கித்தர இயலாது, ஆனால் எந்தவொரு தொழிலாளியினுடைய வேலையையும் நிர்வாகம் பறிப்பதைச் சங்கம் அனுமதிக்காது; வேலையை மீட்டே தீரும்” என முழங்கினார். 1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியை தோழர் வி.பி. சிந்தன் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அனைவருக்கும் வேலையளிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பழிவாங்கப் பட்ட 52 தொழிலாளர்களில் ஓட்டுநராகப் பணி யாற்றிய பூ.நாராயணமூர்த்தியும் (மறைவு - 19.03.1982) ஒருவர். இப்பின்னணியில் தோழர் வி.பி.சிந்தன் வழிகாட்டுதலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய சங்கம் உரு வாக்கப்பட்டது. சங்கம் பதிவு செய்ய கையெழுத் திட்ட 7 பேரில் நாராயணமூர்த்தி முதன்மையானவர். போக்குவரத்து ஊழி யர்கள் பணிக்காலத்தில் தற் காலிக இடைநீக்கம், நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் போதெல்லாம் அவர்கள் மீதான குற்றப் பத்திரிகை களுக்கு (சார்ஜ் ஷீட்) பதிலளி ப்பது, மேல் விசாரணை களில் தொழிலாளர்களுக்கு உதவியாகப் பங்கேற்பது, அவர்களைக் குற்றமற்றவர்களாக வழக்கிலிருந்து விடுவிப்பது போன்ற செயல்பாடுகளில் தனித்துவமாகச் செயல்பட்டவர் தோழர் பூ. நாராயணமூர்த்தி.
தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்து சோர்வுற்ற தருணங்களில் அவர்களுக்கு ஆறுதல் அளித்து நம்பிக்கையூட்டுவதில் அவ ருக்கு நிகர் அவரே. இதில், தலைவர்கள் வி.பி. சிந்தன், கே.எம்.ஹரிபட், அ.சவுந்தரராசன் ஆகி யோர் அவருக்கு அனைத்து விதங்களிலும் வழிகாட்டினார்கள். தனித்துவமாகச் செயல்பட்ட தோழர் பூ. நாராயண மூர்த்தி, தான் மட்டுமே முன்னிலை பெற்று, தனித்தியங்க வேண்டும் என்ற மன நிலை கொண்டவர் அல்ல. எண்ணற்ற முன் னணி ஊழியர்களை உருவாக்கியவர்; செயல்பட ஊக்கமுட்டியவர். “25க்கும் உள்ளிட்ட குற்றச்சாட்டு களை உள்ளடக்கித்தான் நிர்வாகத்தால் குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் வழங்கப்படும். எனவே, அதைக்கண்டு மலைக்க வேண்டாம். நிதானமாக ஆராய்ந்தால் குற்றச்சாட்டுகளுக்கு மிகச் சிறப்பான முறையில் பதில் எழுதலாம்; விசார ணையில் பங்கேற்றும் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு உதவலாம்; மீண்டும் அவர்களுக்குப் பணியை மீட்டெடுக்கலாம்” என்று ஒரு தந்தை யைப் போல போதித்தவர் என தோழர் நாராயண மூர்த்தி காலத்தில் அரசு போக்குவரத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய தோழர் புலவர் குறிப்பிட்டார். அவர் பிறந்த ஊர் கடலூர். 1955இல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனநராக பணியில் சேர்ந்தார். சென்னை திருவொற்றியூர் காலடிப் பேட்டையில் வாழ்ந்தவர். இவரது இரு மகள்களின் கணவர்களும், மகன் மணி முடியும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள். மார்க்சிஸ்ட் கட்சியின், சிஐடியு-வின் முன்னணி ஊழியர்களாக இருந்தவர்கள். தோழர் பூ.நாராயணமூர்த்தி போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவ ராக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழு உறுப்பின ராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க வர லாற்றில் தோழர் பூ. நாராயணமூர்த்தியின் இடம் பெருமைக்குரியதாகும். தொடக்கக் காலத்தில் இவரைப் போன்று போக்குவரத்தில் பணியாற்றிய பல தோழர்கள் ஆற்றிய களப்பணிதான் இப்போது சிஐடியு சங்கம் போர்க்குணமிக்க அமைப்பாகச் செயல்படுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது எனில் மிகையல்ல.