1912இல் இத்தாலி லிபியாவை துருக்கியிட மிருந்து கைப்பற்றியது. அது முதல் 20 ஆண்டுகளாக இத்தாலியை எதிர்த்துப் போர் புரிந்தார் ஒமர் முக்தார். தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய படையாக பெனிட்டோ முசோலினி படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர். ஒமர் முக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசான். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931 செப்டம்பர் 11 அன்று பாசிச இத்தாலிப் படையினரால் உமர் முக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்தது. இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு செப்டம்பர் 16 அன்று தூக்கிலிடப்பட்டார்.
செப்டம்பர் 16: ஒமர் முக்தார் நினைவு நாள்