tamilnadu

img

என்கவுண்ட்டர் தான் குற்றங்களுக்கு தீர்வா? - மெய்.சேது ராமலிங்கம்

 லைக்கா என்ற கார்ப்பரேட் திரைப்பட நிறுவனம் தயாரிப் பில் ரஜினிகாந்த் நடித்து ‘வேட்டையன்’ வெளி யாகியுள்ளது. ‘வேட்டையன்’ நமது அரசியல் சாசன அடிப்படையிலான ஐனநாயக அமைப் பையும் நீதித் துறையையும் கேள்விக்குள்ளாக் கியுள்ளது. குற்றங்களுக்கு போலீசாரால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத படுகொலை களை - அதாவது எந்தவித நீதி விசாரணையும் இன்றி செய்யப்படும் என்கவுண்டர்களை - சட்ட ரீதியாக நியாயப்படுத்தி அதையே குற்றங்க ளுக்கான தண்டனையாகவும்; அவற்றை தடுப்ப தற்கான முன் எச்சரிக்கை  நடைமுறையாகவும் முன்வைத்துள்ளது. இத்திரைப்படம் என்கவுண் டர்களை பெருமிதப்படுத்தி அதையே உயர்த்திப்  பிடிக்கிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

இடைக்கால தடை வழக்கு 

‘வேட்டையன்’ வெளிவருவதற்கு முன்னரே,  இத்திரைப்படமானது என்கவுண்ட்டரை பெருமிதப்படுத்துவதால் அதற்கு இடைக் காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பொது நல வழக்கு ஒன்றை பழனிவேலு என்ற  ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அங்கு சாமி என்ற மூத்த  வழக்கறிஞர் ஆஐராகி  தாக்கல் செய்திருந்த மனுவில் கீழ்க்கண்ட வாறு கூறியிருந்தார்:  “படத்தில் வரும் வசனங்கள், குறிப்பாக  படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்த் ஒரு புகழ்  பெற்ற என்கவுண்ட்டர்  ஸ்பெசலிஸ்ட் என்ற  பெயருடன் வலம் வருகிறார். அவர், என்கவுண்ட்டர் என்பது தண்டனை மட்டும் அல்ல; அது குற்றங்களை தடுக்கும் நடவடிக் கையாகும் என்று வசனமும் பேசுகிறார். இந்த வசனங்களும் படத்தின் மையக்கருத்தும் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அமைந்த நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு விரோதமாக உள்ளன; எனவே, வசனங்களை நீக்க வேண்டும்” என்று  கோரியிருந்தார். மேலும் என்கவுண்ட்டர் என்பது சட்டவி ரோதமானது என்ற சட்டப்பூர்வ எச்சரிக்கையை  குறிப்பிட வேண்டும் (புகைப்பிடிப்பதற்கும் குடிப்பதற்கும் வரும் எச்சரிக்கையைப் போன்று)  என்றும்; அதுவரை படத்திற்கு இடைக்காலத்தடை  விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட அமர்வு, இப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரி வித்ததோடு, விளக்கம் கேட்டு லைக்கா நிறுவ னம், மத்திய தணிக்கை வாரியம் மற்றும் தமிழ் நாடு தலைமை செயலருக்கும் நோட்டீஸ் களை அனுப்ப உத்தரவிட்டனர்.

உறுதிப்படுத்தும் காட்சிகள்

தற்போது வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம் முழுவதும் என்கவுண்ட்டர் குறித்த  வழக்கின் நியாயமான வாதங்களை அப்படியே காட்சிக்கு காட்சி உறுதிப்படுத்துகிறது. கதாநாயகன் ரஜினியா அல்லது துப்பாக்கிக ளும் தோட்டாக்களுமா என்ற கேள்வியும் எழு கிறது. திரைப்படத்தின் டைட்டிலிலிருந்து துப்பாக்கிச் சத்தமும் தோட்டாக்கள் சீறிப்பாய் வதும் ரத்தம் தெறிப்பதாகவுமே  காட்சிகள் நகர்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் கொடூர மான வன்முறைகளையும் மிருகத்தனமான பாலியல் வல்லுறவு காட்சியையும் அதன் பின்னர் தொடரும் கொலையையும் திரும்பத் திரும்பக் காட்டி பார்வையாளர்களை ‘மிரள’ வைத்துள்ளனர். 

காமம் பொழிந்து  நீதி சொல்லும் பாணி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரவுடி களை சுட்டுக் கொல்வதில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட்’டின் பயணம் ஆரம்பிக்கிறது. ஒரு கார்ப்பரேட் கோச்சிங் சென்டரின் மோசடி களை அம்பலப்படுத்தும் ஒரு பெண் ஆசிரியை, அந்த நிறுவனத்தின் கூலிப்படையால் பாலி யல் வல்லுறவு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்தக் குற்றத்தை  ஆசிரியையின் நண்பர் ஒருவர் செய்வதாக சான்றுகள் செட்டப் செய்யப்பட்டு, அப்பாவி யான அவரை தவறாக என்கவுண்ட்டர் செய்து  கொலை செய்கிறார் கதாநாயகன். பின்னர் தவ றாக என்கவுண்ட்டர் செய்து விட்டோம் என்று   வருந்தி ஒரு நீதிபதியிடமும் அவரால் கொல்லப் பட்ட அப்பாவி இளைஞனின் தாயாரிடமும் மன்னிப்பு கேட்கிறார். அந்த இளைஞர் குற்ற வாளி அல்ல, நிராபராதி என்று நிரூபிப்பதாக தாயாரிடம் சத்தியம் செய்கிறார். பின்னர் அவர்  செய்தது என்கவுண்டர் அல்ல; கொலை என்று  ஏற்றுக் கொள்கிறார். அதை ஒரு நீதிபதியின் முன்னரே ஒப்புதல் வாக்குமூலம் போன்று அளிக்கிறார்; அதற்கு சரணடையப் போவ தாகவும் கூறுகிறார். தான் கொலைக் குற்ற வாளி என்று ஒப்புக் கொண்ட பின்னர், அவரே  அந்த வழக்கின் விசாரணையை முழுக்க  நடத்துகிறார். புதிய போலீஸ் அதிகாரி களுக்கு நல்லொழுக்க போதனை வகுப்பும்  நடத்துகிறார். அந்த வகுப்பில் என்கவுண்ட்டர்  செய்வதற்கு துப்பாக்கியின் டிரிக்கரை அழுத்து வதற்கு விரல்களை பயன்படுத்தாதீர்கள்; உங்கள் மனசாட்சியைப் பயன்படுத்துங்கள் என்று இறுதி போதனை செய்கிறார். கடைசி வரை அவர் விசாரிக்கப்படவோ, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்படவோ இல்லை என்பது வேடிக்கை.

வில்லன்களும் அடியாட்களும் நல்லவர்கள் ?

திரைப்படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெச லிஸ்ட்டாக நடிக்கும் ரஜினியின் முதுமை அவரின் நடையிலேயே தெரிகிறது. ஆனால் அவர் சில சமயங்களில்  நுற்றுக்கணக்கிலும் சில  நேரங்களில் ஐம்பதுக்கும் குறையாத அடி யாட்களை இப்போதும் தனி ஒருவராக நின்று  ‘பந்தாடுகிறார்’. இந்த இடத்தில் வில்லன்களா கவும் அடியாட்களாகவும் நடிக்கும் மிக நல்ல  உள்ளங்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  அவர்கள் எவ்வளவு பேர் இருந்தா லும் ஒருவர் பின் ஒருவராகவே வந்து கதாநாய கனிடம் அடி வாங்கி செல்கின்றனர். அவர்கள் ஒரு போதும் கூட்டாக இணைந்தபடி கதாநாய கனை தாக்குவதே கிடையாது. ‘தமிழ்’ படங்க ளுக்கே உரிய அதிசய குணம் கொண்ட  இவர்கள் எத்தனை காலம் தனித்தனியாக வந்து  அடி வாங்குவார்களோ தெரியவில்லை. நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன், போலீஸ் உயர் அதியாரியாக வரும் ரோகிணி  மற்றும் ரித்திகா சிங் பாசில், ஆசிரியையாக சரண்யா, வில்லனாக வரும் ராணா தகுபதி,  மஞ்சு வாரியர் என ஒரு பெரிய நடிகர் பட்டா ளமே நடித்திருந்த போதும், கதாநாயகனுக்கு உதவிடும் திருடன் கம்  போலீஸ் போன்று செயல்படும் பாசில், ஆசிரியையாக சரண்யா  போன்ற சில கதா பாத்திரங்களே மனதில் நிற்கின்றனர்.  பல படங்களில் இருந்து வெட்டி யெடுக்கப்பட்ட மிகப்பழைய கதையைக் கொண்ட இந்த படத்திற்கு இவ்வளவு பெரிய  பட்டாளம் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.  கடைசியில் ‘மனச்சாட்சிப்படி’ என்க வுண்ட்டர் செய்யலாம் என்பதையே படம் நீதி யாக போதிக்கிறது. 

அலட்சியப்படுத்தப்படும் தீர்ப்புகள்

தேசிய மனித உரிமை ஆணையமும் உச்ச  நீதிமன்றமும் என்கவுண்ட்டர்களை இந்திய  தண்டனைச்சட்டம் 302ன் படி கொலைக் குற்றமாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட  போலீஸ்  அதிகாரியின் மீது வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஒருவர் எவ்வளவு  குற்றம் இழைத்திருந்தாலும், சட்டத்தின் படியே நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி தண்டனை வழங்க  வேண்டும் என்றும் உச்ச  நீதிமன்றம் தனது எத்தனையோ தீர்ப்புகளில்  வலியுறுத்தியுள்ளது. ஆனால் இவற்றை யெல்லாம் துச்சமாக மதித்து, போலீசாரே நீதி பதிகளாகி என்கவுண்ட்டர் செய்வது எப்போது தான் நிறுத்தப்படுமோ தெரியவில்லை. இறுதியாக, எளிய மக்களின் மீது காவல் துறை நடத்திய கொடூர வன்முறையை மிக அழகாக உணர்வுப்பூர்வமாக ஜெய்பீம் என்ற திரைப்படமாக கொண்டுவந்த இயக்குநர் ஞான வேலிடம் இருந்து, இப்படி ஒரு  திரைப்படமா  என்ற கேள்வி, திரைப்பட கார்ப்பரேட்டுகளின் சர்வ வல்லமையின் பிடியிலிருந்து யாரும்  தப்பி விட முடியாது என்பதையே காட்டுகிறது.