கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் தகவல்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒரு குற்றச் சம்பவம் நடந்தவுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இது போன்று செயல்படுவது கிடையாது. அதனால்தான் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றச் சம்பவம் நடைபெறுவதாக தெரிகிறது.
புதுக்கோட்டை, ஜன.3- புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக, தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் ஜவஹர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்து புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சா வூர் மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை இரவு வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் ஜவஹர் ஆய்வு மேற்கொண் டார். புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் கூடுதல் தலை மைச் செயலாளர் ஜவஹர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. நீர் தேக்கத் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு, சோத னைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள் ளது. அந்த ஆய்வில், தொட்டியில் கொட்டப்பட் டது மனித கழிவா அல்லது விலங்குகளின் கழிவா என்பது தெரியவரும். இதுகுறித்து விசாரிப்பதற்காக ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறது. மேலும், இந்தச் செயலை செய்தோ ருக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு, தகுந்த ஆதாரங்களை சேகரித்த பிறகுதான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக் கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஒருபுறம் வளர்ச்சி திட்ட பணி கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தி வந்தா லும், மற்றொரு புறம் குற்ற சம்பவங்களை தடுக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒரு குற்றச் சம்பவம் நடந்தவுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மற்ற மாநி லங்களில் இது போன்று செயல்படுவது கிடை யாது. அதனால்தான் வெளியே இருந்து பார்ப்ப வர்களுக்கு, தமிழ்நாட்டில் அதிக அளவு குற்றச் சம்பவம் நடைபெறுவதாக தெரிகிறது.
போலி சாதிச் சான்றிதழ் குறித்து கண்ட றிய மாநில ஆய்வுக் குழு உள்ளது. இது தொடர்பாக, மொத்தம் 3,070 வழக்குகள் நிலு வையில் இருந்தன. கடந்த 8 மாதங்களில், 800 வழக்குகளுக்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் மீத முள்ள வழக்குகளும் முடிக்கப்படும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தீண்டாமையோ, கோயில் வழிபாடு மறுப்போ அரங்கேறுவ தில்லை. தனி நபர்கள் கட்டிய கோயில், அறக் கட்டளை மூலம் கட்டப்பட்ட சில கோயில்களில் தான் இது போன்ற தீண்டாமையும், கோயில் வழிபாடு மறுப்பும் உள்ளது. எங்கு தவறு நடந் தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இறையூர் பிரச்சனைக்கு பிறகு, சாதிய வன்கொடுமை சம்பந்தமான புகார்களை தெரி விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப் பட்ட வாட்ஸ்அப் எண்ணில் இதுவரை 25 புகார் கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையில் முறையான அதிகாரிகளை நியமிக்காததால் அந்தத் துறையை செயல் படுத்துவது சிரமமாக இருந்தது. இதுகுறித்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது, இத்துறைக்கு கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து இறுதிக் கட்ட கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக் குள் அப்பணி நிறைவடையும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான பிரச்சனையை 2 ஆண்டுகளிலோ, 20 ஆண்டுகளிலோ மாற்றிவிட முடியாது. கொஞ் சம் கொஞ்சமாகத் தான் மாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.