tamilnadu

img

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: எம்.சின்னதுரை

சென்னை, அக்.11- தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான முதல்  துணை மதிப்பீடுகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்று எம். சின்னதுரை பேசியது வருமாறு:- சிறப்புமிக்க திட்டமான காலை சிற்றுண்டி திட்டம், மருத்துவம், உயர்கல்வியில் தனி இட ஒதுக்கீடு, புதுமைப் பெண் உள்ளிட்ட அனைத்து நல திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் விரிவு படுத்த வேண்டுகிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

வச்சாத்தி பழங்குடியின மக்கள் மீதான வன்முறை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று  சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது. 31 ஆண்டுகள் நீதிக்காக வும், நிவாரணத்திற்காகவும் காத் திருக்கும் வாச்சாத்தி மக்களுக்கு நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் காப்பீடு இல்லை. பிரதமர் காப்பீட்டு திட்டம் இயற்கை இடர்பாடுகளின் போது விவசாயிகளுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. தனியார் காப்பீடு  நிறுவனங்களுக்கு மட்டும் லாபமே  தவிர, பெரும்பாலான விவசாயி களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே, மாநில அரசு பயிர் காப்பீட்டு  நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்த  வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது. கூடுதல் தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுகிறோம்.

பழிவாங்கப்படும் தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் unipress India private limited, mentor printing and logistics private limited ஆகிய தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக நிர்வா கத்தினால் பழிவாங்கப்பட்டு இருக் கிறார்கள். இந்த பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட்டு சுமூகத்  தீர்வு காண வேண்டும் என்றும், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலா ளர் சட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டு மென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

வீரதீர சாகசம்
நெல்லை மாவட்டத்தில் சாதி பாகுபாடுகளை களைவதற்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, தாக்குதலுக் குள்ளான மாணவன் சின்னதுரை பள்ளி படிப்பை தொடரவும், அக்குடும்பத்திற்கு அரசு வேலையும்,  அவரது தங்கைக்கு வீரதீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசு போக்குவரத்து கழகங்க ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு  ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படா மல் இருக்கிற அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத் தில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது தீபாவளி பண்டிகை காலம் வர உள்ளதால் தொழி லாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.   நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தால் மக்கள் பயனடைந்தார்கள்.  ஆனால் மேல்முறையீடு செய்த வர்கள் விஷயத்தில் இதுவரை எவ்விதமான அறிவிப்பும் வர வில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.  தமிழ்நாடு முழுவதும்  குடிமனைப் பட்டாவுக்காக பல்லா யிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றன. கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்  செய்யும் போது நிகழும் மரணத்தை தவிர்த்திட பயோ செப்டிக் டேங்க்  தொழில்நுட்பத்தை பயன்படுத்து வதற்கு அரசு முன்வர வேண்டும்.  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதை மீண்டும் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கைவிரல் ரேகை பதிவு அவசியம் இல்லை: அமைச்சர்

சின்னதுரை: ரேசன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள்  அனைவரும் கைரேகை வைத்தால்தான் அனைத்து பொருட்களும் கிடைக்கும்  என்றும் இல்லையென்றால் பெயர்  நீக்கம்  செய்யப்படும் என்று  கூறுவதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது இதை கைவிடவேண்டும். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி: ரேசன் கடைகளில் அரிசி மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த பொருட்களை பெற குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்வது அவசியம் இல்லை. ரேசன் கடைகளில் கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் ரேசன் அட்டை ரத்து செய்யப்படாது என்றும் பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.