tamilnadu

img

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கும் மசோதா தாக்கல்

புதுதில்லி,டிச.14-  நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கும் மசோதாவின் மீது திருத்தங் களை முன்மொழிந்து நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி.,பேசியதாவது: நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலு க்கு கொண்டு வருகிற இந்த திருத்த த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வரவேற்கிறேன், அதே நேரத்தில் இந்த மசோதாவின் மீது இரண்டு திருத்தங்களை இங்கே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். நரிக்குறவன், குருவிக்காரன் என்று ‘ன்’ விகுதியிலே இருப்பது மரியாதை  குறைவானது மட்டுமல்ல அந்த சொல்  என்பது ஆணை மட்டுமே குறிக்கும். பெண்ணை குறிக்காது. எனவே பன்மை  விகுதியில் நரிக்குறவர், குருவிக் காரர் என்று திருத்தம் செய்யவேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில்  கேட்டுக்கொள்கிறேன்.  அதே போல ஏற்கனவே தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிற பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின சமூகத் திற்கு மாற்ற வேண்டியவை பல நிலுவை யில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் உடனடியாக ஒன்றிய அரசு கணக்கில் எடுத்து உரிய திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.