tamilnadu

img

ஆவின் பொருட்கள் விலை உயர்ந்தது

சென்னை,ஜூலை 21- தயிர், லஸ்சி, மோர்  உள்ளிட்ட பால் பொருட்க ளுக்கு ஒன்றிய பாஜக அரசு 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால்  நிறுவனங்களும் தயிர் பாக் கெ்ட்டிற்கான விலையை ரூ.4 முதல் ரூ.10 வரை உயர்த்தியது. இந்த நிலையில் ஆவின் நிறுவனமும் தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பால் பொருட்களுக்கு ஜூலை 21 முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட பொது மேலாளர்க ளுக்கும் ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆவின் நெய் லிட்ட ருக்கு ரூ.45 உயர்த்தப் பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் ரூ.580 ஆக அதிக ரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5  லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ  ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல்  இருந்து 50 ஆகவும், பிரிமி யம் தயிர் ஒரு கிலோ  ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும்  அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு  விற்கப்படுகிறது. 200 மில்லி  பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோ பயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை  21 முதல் அனைத்து ஆவின்  விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்க ளில் நடைமுறைக்கு வந்தது.