சென்னை, ஜூன் 3- மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், அரசு விழாவாக வெள்ளி யன்று (ஜூன்3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள கருணா நிதியின் சிலைக்கும், உருவப்பட த்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கலைஞர் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத் துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; ‘உடன்பிறப்பே...’என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்! இன்னும் ஓராண்டில் நூற்றாண்டு காணும் தமிழ்நாட்டின் தலைமகன் - தன் உதிரத்தால் எனைச் சமைத்த எந்தை ‘தமிழினத் தலைவர்’ கலைஞரைப் போற்றினேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.