விசாரணை கைதியை கொன்ற வழக்கில் டிஎஸ்பி உட்பட 9 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
1999 ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசார ணைக் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உட்பட 9 காவ லர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய தொடர் சட்டப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட்.இவர் உப்பளத் தொழிலாளி. இவரை கடந்த 17- 9- 1999 அன்று வழக்கு விசாரணைக்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்தனர்.
18-9-1999 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் வின்சென்ட் மர்மமான முறையில் இறந்தார். வின்சென்ட்டின் மனைவி கிருஷ்ணம்மாள் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்துக் கொலை செய்து விட்ட தாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று .இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவ லர்கள் சோமசுந்தரம், ஜெய சேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிர மணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வா ளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்-1 இல் நடை பெற்று வந்தது. வழக்கை விசார ணை செய்த நீதிபதி தாண்டவன் இந்த வழக்கில் தொடர்புடைய 11 ஆவது குற்றவாளியான தற்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றாவது நபர் தற்போது நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜெய சேகரன், ஓய்வு பெற்ற காவலர் ஜோசப்ராஜ் ,தற்போது உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா ,ஓய்வு பெற்ற காவலர் செல்லதுரை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரபாகு, ஓய்வுபெற்ற காவலர் சுப்பையா, ஓய்வு பெற்ற காவலர் பாலசுப்பிரமணியம் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .
இந்த வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரான ஓய்வு பெற்ற காவலர் சிவ சுப்பிரமணியன் மற்றும் ஒன்ப தாவது நபரான இரத்தினசாமி ஓய்வு பெற்ற காவலர் ஆகியோரை விடுதலை செய்தார். பாதிக்கப்பட்ட வின்சென்ட் குடும்பத்தின் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஆர்.எஸ்.ராம மூர்த்தி மற்றும் வழக்கறிஞர் சுப்பு முத்து ராமலிங்கம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு 9 காவலர்களுக்கு தண்டனை அறிவித்துள்ள இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் வரவேற்பதாக மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம் தெரி வித்துள்ளார். மேல அலங்காரத்தட்டு பகுதியில் உள்ள இல்லத்தில் வின்செட்டின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் வின்சென்ட் மனைவி கிருஷ்ணம்மாள், மகன் செந்தில் செல்வம், செந்தில் குமார், செந்தில் செல்வா, செந்தில் பரமேஸ்வ ரன், செந்தில் பூபதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், ஒன்றியக்குழு உறுப்பி னர் பெருமாள், உப்பு தொழி லாளர் சங்க மாவட்ட துணைத்தலை வர் கிருஷ்ணன், துறைமுக தொழி லாளர் சங்க நிர்வாகி முத்துச்சிப்பி தாமோதரன், மூத்த தோழர் ஆர். கே. பிச்சையா, உப்புத்தொழியாளர் சங்க துணைத்தலைவர் எஸ். கிருஷ்ணம்மாள், மேல அழகாபுரி உப்பு சங்க நிர்வாகி பி.ஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.